News April 16, 2024

₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்

image

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. தான் வெற்றிபெற்றால் தேனி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக” உறுதியளித்துள்ளார்.

News April 16, 2024

EVM இயந்திரங்களை தயாரிப்பதே பாஜகவினர் தான்!

image

EVM இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100% சரிபார்க்க கோரிய வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் வாதத்தை முன்வைத்தார். மேலும், தற்போது உள்ள நடைமுறைப்படி ஒப்புகைச் சீட்டு உள்ளே விழுகிறதா? இல்லையா? என்பது கூட தெரியவில்லையெனவும் முறையிட்டார். தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

News April 16, 2024

அதிமுக எம்.எல்.ஏக்களால் எம்.பியானவர் அன்புமணி

image

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட்டதால் தான் அன்புமணி எம்.பியாக இருக்கிறாரென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிலடி அளித்துள்ளார். தர்மபுரியில் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக அதிமுக பிறப்பித்த உத்தரவை திமுக நீட்டிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக. அமல்படுத்தியது பாஜக. அவர்களுடன் தான் பாமக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

News April 16, 2024

ரஜினி படத்தில் இணையும் தெலுங்கு நடிகர்?

image

தற்போது ‘வேட்டையன்’ படத்தின் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News April 16, 2024

18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

News April 16, 2024

முற்பகல் 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த அறிவுரை

image

மருந்து சேமிப்பு கிடங்குகள், குளிர் பதனக் கிடங்குகளைக் காற்றோட்டமாக வைத்திருக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்குப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், வெயில் காரணமாகத் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முற்பகல் 11 மணிக்கு முன்பே நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 16, 2024

இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

image

★ இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 808.6 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ★ இந்தியாவில் 1,27,760 கிமீ நீள ரயில் பாதைகள் உள்ளன. ★ மிக வேகமான ரயில் வந்தே பாரத். ★ மெதுவாகச் செல்லும் ரயில் நீலகிரி பயணிகள் (மணிக்கு 10 கிமீ). ★ இந்தியாவிற்குள் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ் (4,286கிமீ). ★ மிக நீளமான ரயில் நடைமேடை – கர்நாடகாவின் ஹூப்ளி (1507மீ).

News April 16, 2024

UPSC தேர்வில் தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி

image

UPSC முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் மொத்தம் 1,143 பேர் தேர்ச்சியடைந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புவனேஷ் ராம் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2024

முடிவுக்கு வந்தது சன் டிவி சீரியல்

image

1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அன்பே வா’ சீரியலை முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி. அந்த நேரத்தில் புதிதாக ஒளிபரப்பாகப் போகும் ‘மல்லி’ என்ற சீரியலின் ப்ரோமோவும் வெளி வந்திருக்கிறது. இந்த சீரியலில் விஜய் வெங்கடேஷ், நிகிதா அகியோர் நடிக்கவுள்ளனர். அன்பே வா சீரியலில் இருந்து டெல்னா டேவிஸ் விலகியதால் அது முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.

News April 16, 2024

பிற்போக்குத்தனமாக வழக்குத் தொடர்வதா?

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வழங்கப்படும் செங்கோலை, கோயில் அறங்காவலர் ருக்மணியிடம் (கைம்பெண்) வழங்கக்கூடாது எனத் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே எனக் கேள்வி எழுப்பிய கோர்ட், இன்றைய நவீன உலகில் பிற்போக்குத்தனமாக வழக்குத் தொடர்வதா என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தது.

error: Content is protected !!