India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை தேமுதிகவுக்கு உறுதியாக ஒரு மாநிலங்களவை சீட் கேட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சீட் கேட்பது எங்களது உரிமை. அதைத் தர வேண்டியது கூட்டணிக் கட்சியின் தர்மம் எனப் பேசிய அவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அங்கு வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அவருக்கே வாய்ப்பு தருவோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிருக்கு ₹1,000 உரிமைத்தொகையை திமுக அரசு அளித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் தொடர்ந்து 3 முறை அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தியதாகவும், தேர்தலுக்கு முன்னர் அனைவருக்கும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்களுக்கு பிறகு தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால், 2 பேர் இறக்கின்றனர். 2011 இல் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 இல் அங்கு மக்கள் தொகை 90 லட்சம் ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைப் பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும், அந்நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவும், அதிமுகவும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதால் 2 கட்சிகளுக்கும் வாக்களிப்பது ஒன்றுதான் என விமர்சித்தார். மேலும், அதிமுகவில் ஆள் கிடைக்காததால் தான் மதுரை வேட்பாளராக சரவணன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சத்தம் அடித்த சுனில் நரைன் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஹாட்ரிக் விக்கெட் + 100 ரன்கள் எடுத்த முன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா, வாட்சன் இந்த சாதனையை படைத்துள்ளனர். 2009இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ரோஹித், மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை (18.04.2024) முதல் வெப்ப அலை வீசும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக மழை பெய்துவரும் நிலையில், வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கவுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் ப்ரதீப் கூறியுள்ளார். தயாராக இருங்கள் மக்களே.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய சுனில் நரைன் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை (109) பூர்த்தி செய்தார். ரகுவன்ஷி 30, ரிங்கு சிங் 20* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து RR அணிக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. RR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் சென், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் 3 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டைச் சேர்ந்த கோகிலவாணியின் (25) கணவர் சசிதரன் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். தனிமையை தாங்கிக் கொள்ள முடியாத கோகிலவாணி, பவானியில் லாட்ஜ் எடுத்து தங்கி தற்கொலை செய்திருக்கிறார். இந்த விபரீத முடிவுக்கு முன் குழந்தையையும் கொலை செய்திருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.