India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?

3 மாதங்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நம்பரை Recycle என்ற முறையில், Airtel புதிதாக நம்பர் வாங்குபவர்களுக்கு கொடுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி வாங்கிய புதிய நம்பரில், முன்னர் அதை முன்னர் பயன்படுத்தியவரின் Facebook, Uber, Swiggy போன்ற அக்கவுண்டுகளில் தானாகவே Log-in செய்ய முடிவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது மட்டுமின்றி ஆதார், UPI அக்கவுண்டுகளின் தகவல்களும் திருடு போகும் அபாயம் உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் <<18225496>>ஸ்ரீகாந்த்<<>> ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்.28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இன்று ஆஜராகியுள்ள இவரிடம், போதைப் பொருள் வாங்கியது குறித்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.

டெல்லி குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமரின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர். உமருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வோர் யார் யார் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உமருடன் நெருக்கமாக இருந்தவர்களையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செய்யுறது ஒரே வேலை. ஆனால் சம்பளம் மட்டும் ஒருத்தருக்கு அதிகம் ஒருத்தருக்கு குறைவு என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கலாம். அதுதொடர்பாக Levels.fyi ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் Software Engineer-களுக்கு எந்தெந்த நகரங்களில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுடைய சம்பளம் போதுமானதா இருக்கா?

டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என PM மோடி தெரிவித்துள்ளார். பூடானில் பேசிய அவர், இரவு முழுவதும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் எனவும், சதித்திட்டத்தின் ஆணிவேர் வரை சென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரு நாள்கள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள PM மோடி நாளை டெல்லி திரும்பியதும், மாலை 5:30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.

அதிமுக ஒன்றிணைவது என்பது முடிந்துபோன ஒன்று; இனி அதற்கு சாத்தியமே இல்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெ., இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு டிடிவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஜெ., வகித்த பதவிக்கு ஆசைப்பட்டு துரோகம் செய்ததால், இந்த பிறவி அல்ல எந்த பிறவி எடுத்தாலும் அவர் தப்ப முடியாது. 2026 தேர்தலுக்கு பிறகு டிடிவியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.