India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்.19) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா மதுக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கு 4 குவாட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவால் ஒன்றுக்கு இரண்டு முறை காத்திருந்து மதுப்பிரியர்கள் மது வாங்கிச் சென்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தான் கதாநாயகன், எங்களுக்கு எப்போதும் வில்லன் திமுக தான். பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் பாஜகவை நம்ப மாட்டார்கள். பாஜக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குத்தான் வாங்குவார்கள். பாஜகவோட டிரெய்லர் நல்லாயிருக்கும். ஆனால் படம் ஃப்ளாப் ஆகிவிடும் எனவும் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவான ஏப்.19ஆம் தேதி வரை 3 நாளுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் சிலர் நேற்று மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்கின்றனர். இதை தேர்தல் பறக்கும்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது முயற்சிக்கு, ராமரின் ஆசீர்வாதங்கள் புதிய சக்தியை அளிக்குமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு தனது X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ராம பிரானின் ஆசீர்வாதம் என்றும் நமக்கு கிடைக்கட்டும். நீதி மற்றும் அமைதியின் பாதையில் நம்மை வழி நடத்துவதுடன், நம் வாழ்வில் ஞானத்தையும், துணிவையும் பிரதிப்பலிக்கட்டுமென தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘ராவணன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2010இல் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படம், மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அண்மைக் காலமாக தமிழகத்தில் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருப்பூரில் இன்று ராவணன் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் எந்த பக்கம் திருப்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடப்பதாக அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாஜகவினர் ₹500, காங்., கட்சியினர் ₹200 வாக்காளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், தேர்தலை புறக்கணிப்பேன் என கூறியுள்ளார்.
மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறால் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘விசில் போடு’ பாடலை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிலர் இந்தப் பாடலை அரசியல் உடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். ஆனால், இது ஒரு வீடியோ கேம் பார்ட்டி அவ்வளவு தான். புது மிஷன் ஒன்றிற்கு அனைவரையும் வரவேற்கும் விதமான பாடல் தான் இது. முதலில் ‘சல்யூட்’ என்று தான் எழுதினேன். ஆனால், அது சரியாக பொருந்தவில்லை எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று அனைத்து கடைகளும் இயங்கும் என சொல்லப்பட்ட நிலையில், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மார்க்கெட், சந்தைகள் இயங்காது என சொல்லப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக தேர்தலுக்கு முதல்நாளே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனிடையே ஓபிஎஸ்-ஐ ஆதரித்து நேற்று ஜெ.பி.நட்டாவின் பிரசாரத்தின் போது ராமநாதபுரம் பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, பாஜகவினரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.