India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நேர்மையாக நடந்தால், பாஜக 180 தொகுதிகளில் கூட வெல்லாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவின் ‘400 தொகுதிகளில் வெற்றி’ என்ற இலக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், 400 இடங்களில் வெல்வோம் எனக் கூற அவர்கள் என்ன ஜோதிடர்களா? எனக் கேள்வி எழுப்பினார். இந்தத் தேர்தல் மக்கள் பிரச்னைகளை முன் வைத்த தேர்தலாக இருக்க வேண்டும் என்றார்.
ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவச் சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ரூ.1 இலட்சம் வரையிலான பணத்தைத் திரும்பப் பெற முடியும். இதற்கு முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000ஆக இருந்தது. படிவம் 68Jஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்காக முன் பணம் கோரலாம்.
பெரம்பலூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனப் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார். ஊழல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இறுதி செய்யும் தேர்தலாக மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் குடும்ப ஆட்சி நடத்தும் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், கூட்டணிக் கட்சியினர் உதவியுடன் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே அதிக டாட் பால்களை வீசி சாதனை படைத்துள்ளார். மொத்தம் 22 ஓவர்களில் 60 டாட் பால்கள் வீசி அசத்தியுள்ளார். முன்னதாக, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், வட்டி விகித குறைப்பு நடவடிக்கை மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவெல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பணவீக்க விகிதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 சதவீதத்திற்குள் தொடர்ந்தால் மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். இதனால் இந்தியாவிலும் ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளது.
நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்கள் 25 பேரின் ரூ.16 இலட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பிரசாரம் செய்த அவர், பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்த மோடியால் ஏழை விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என மக்கள் கேட்பதாகத் தெரிவித்தார். மேலும், அந்தப் பணம் 25 ஆண்டுகளுக்கான 100 நாள்கள் வேலைத் திட்டத்திற்கான பணத்துக்குச் சமம் என்றார்.
தமிழ்நாட்டில் இதுவரை ₹1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாகத் திருச்சியில் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அமேதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், கடந்த தேர்தலை போல மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ராகுல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். 2004 முதல் 2014 வரை அங்கு வென்ற ராகுல், கடந்த தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
பாஜகவில் தலைவர்கள் இல்லையென்றால் அனைவரும் அதிமுகவுக்கு வந்துவிடலாம் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இத்தனை நாள்களாக அதிமுக தலைவர்கள் சிலைக்கு பாஜகவை தேர்ந்த யாரும் மரியாதை செய்யாத நிலையில், தேர்தல் வெற்றிக்காக தற்போது பாஜகவினர் நடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக இன்று காலை பாஜக மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஜெயலலிதா நினைவிடம் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 2553 மருத்துவருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், <
Sorry, no posts matched your criteria.