India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. இப்போது முதல் வாக்குப்பதிவு முடியும் வரை எந்தக் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் பரப்புரை செய்வதற்கு அனுமதி கிடையாது.
மோடியை மீண்டும் பிரதமராக்குவது மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவதற்கு சமம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் கட்சி அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறுகிறார். அவர் மனதில் எவ்வளவு பாசிச எண்ணம் இருக்கிறது என்பதை அறிய இதுவே சான்று என்று கூறிய அவர், மோடியின் படம் இந்த மக்களவைத் தேர்தலில் ரிலீஸ் ஆகாமலேயே தோல்வி அடையும் என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களுக்கு திராவிட மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில் நாம் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்கள் என்றாலே பிரதமர் மோடிக்கு பிடிப்பது இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது எனப் பிரதமர் நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுவரை எத்தனையோ பிரதமர்களை இந்தியா பார்த்துள்ளது. ஆனால், மோடி போல வசூல் ராஜாவை இதுவரை பார்த்ததில்லை என்ற அவர், ரெய்டு என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பாஜக வசூல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், ஊழல் கறை படிந்தவர்களை மோடி சுத்தமாக்கி விடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
430 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக எப்படி 400 இடங்களில் வெல்லும் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதியிலும் தோல்வி அடையும் என்ற அவர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்றார். மேலும், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தருமபுரியில் 2014இல் தன்னை வெற்றிபெற வைத்து போல் 2024இல் தனது மனைவியை வெற்றிபெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தருமபுரியில் கடந்த 5 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் செளமியா அன்புமணி வெற்றி பெற்ற உடனே நிறைவேற்றுவார் என உறுதியளித்த அவர், தருமபுரி பாமகவின் கோட்டை என்பதை மீண்டும் பொதுமக்கள் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் தலைவர்களும் தற்போது களத்தில் அனல் பறக்கப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரப் பரப்புரை நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி யாருக்கு? கமெண்ட்டில் சொல்லுங்க.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு, எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில், உளுந்து, பாசிப் பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். முழு உளுந்து 100 கி. மூட்டைக்கு ₹700, சாதா உளுந்து ₹200, தொலி உளுந்து ₹100 மற்றும் பாசிப் பருப்பு ₹150 வரை விலை உயர்ந்துள்ளன.
இது யார் ஆட்சியில் தொடரக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், ‘மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்பது பொய் என்று 10 ஆண்டுகளில் தெரிந்து விட்டது. ஜனநாயகம் காக்கும் போர்க்களத்தில் நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க மூன்றாம் பாலினத்தவர் புள்ளிவிவரங்களை சேகரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடத்தை விதி நீக்கப்பட்ட பின் 3 மாதங்களில் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்கவும், ஏற்கெனவே சலுகை வழங்கப்பட்டால் அது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.