India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!
பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஆனால், பாஜகவுடன் அதிமுக மீண்டும் இணைந்தபிறகு ஓபிஎஸ் கண்டுகொள்ளப்படவில்லை. குறிப்பாக, சந்திப்பதற்கு அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை, முருகன் மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அதேநேரம், நயினார் மட்டும் ஓபிஎஸ் NDA-ல் உள்ளதாக கூறி வருகிறார். எனவே, தனது இருப்பை காட்டிக்கொள்ள பயணத்தை அறிவித்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தனுஷின் லைன்-அப்களில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் உள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், வீர தீர சூரனில் மிரட்டிய சுராஜ் வில்லனாக இதில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இட்லி கடை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மூச்சுப்பயிற்சி ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மனக்குழப்பம், அதிகப்படியான யோசனை, பதற்றம் போன்ற தொந்தரவுகளை மூச்சுப்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். இது நுரையீரலுக்கும் மிகவும் நல்லது. மூச்சுப்பயிற்சியை, ஆரம்பத்தில் 3 நிமிடங்கள்- 10 நிமிடங்கள் வரை செய்யுங்க. பின்னர் சில நாள்கள் கழித்து, நேரத்தை அதிகரித்து 10- 20 நிமிடங்கள் வரை செய்யலாம். ட்ரை பண்ணுங்க.
<<16998000>>17 அம்ச கோரிக்கைகளை<<>> வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்று ஸ்டிரைக் நடக்கிறது. TN-ல் CITU, AITUC, LPF உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் நடத்துகின்றன. திமுகவின் LPF கூட இதில் பங்கேற்கிறது. TNSTC பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் தங்களது எதிர்ப்பை காட்ட ஸ்டிரைக் செய்வோம் என CITU, LPF ஊழியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளதால் பஸ், ஆட்டோ சேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.