India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒரே நேரத்தில் பாஜக, விஜய்யை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், நேற்று கட்சி ஆரம்பித்த உடன் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று விஜய்யையும் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மேலும், திமுகவை போல் வெற்றிபெற வேண்டும் என்றால் திமுகவை போன்ற அறிவும், உழைப்பும் தேவை எனக் கூறினார்.

உலகின் 4-வது பெரிய பணக்காரரான மார்க் சக்கர்பெர்க் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்ன காரணம் தெரியுமா? அரசு அனுமதி பெறாமல் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே ‘Bicken Ben School’ என்ற பள்ளியை நடத்தி வந்ததாக அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நகர நிர்வாகம் பள்ளிக்கு தடை விதித்தது. இந்நிலையில், பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக சக்கர்பெர்க் தரப்பு கூறுகிறது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபமாக விவாகரத்து பெறும்போது சிலர் கேட்கும் ஜீவனாம்ச தொகை பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்படி நெட்டிசன்களின் கேள்விகளில் சிக்கியுள்ளார் ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். அவர், ஷமி தனக்கு வழங்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது எனவும், ₹10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் வாதம் நடந்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன?

கரூரில் Ex அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, MR விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த EX தாந்தோணி நகரக் கழக செயலாளர் ரவி, துணை செயலாளர் K.மகாதேவன், வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் N.பாலாஜி ஆகியோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

நோபல் பரிசு, உலகளவில் பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. தனக்கு நோபல் பரிசு வேண்டும் என டிரம்ப் கேட்டதற்கும் இதுவே காரணம். ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் தான், நோபல் பரிசை நிறுவினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 1901-ல் முதலாக இந்த நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.