India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணையும் போது, சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகும். ராம நவமியன்று மேஷ ராசியில் இந்த 3 கிரகங்களும் சஞ்சரித்துள்ளதால் கடகம், சிம்மம், கன்னி, மகர ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. வேலைக்கு செல்வோர் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு தேடி வரும். வீடு, மனை வாங்கும் யோகம், பொன், பொருள் சேர்க்கை என மேற்கண்ட ராசியினர் ராஜ வாழ்க்கை வாழப் போகின்றனர்.
வாக்களிக்க யாராவது பணம் தந்தால் தயவு செய்து வாங்கி விடாதீர்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123(1)இன் கீழ் வாக்களிக்கப் பணம் பெறுவது லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றமாகும். இப்படி பணம் பெறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171(b)இன் படி வழக்குப்பதிவு செய்து ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். அதனால், பணம் வாங்காமல் ஜனநாயக கடமை ஆற்றுவதே நமக்கும், நாட்டுக்கும் நல்லது.
ஒருவர் படுக்கைக்குச் சென்ற 15 நிமிடங்களில் தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையான தூக்க முறை. ஆனால், அரை மணி நேரம் ஆகியும் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்கள் என்றால், தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது உடல் பிரச்னையா? அல்லது மனநலம் சார்ந்த பிரச்னையா? என்பதை கண்டறிய வேண்டும். பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். தூக்கமின்மை பிரச்னை குறித்து பயப்பட அவசியமில்லை.
காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்தால் அதற்கு பெண் பொறுப்பில்லை என டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. காதலிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தந்தை புகாரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் ஜாமின் கோரிய வழக்கை விசாரித்த கோர்ட், பலவீனமானவர் எடுக்கும் தற்கொலை முடிவுக்கு பிறர் காரணமில்லை எனக் கூறிய ஜாமின் வழங்கியது.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் முதலில் விளையாடிய GT, 89 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் முகேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய DC அணி, 8.5 ஓவர்களில் 92/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாக் 20 ரன்கள் எடுத்தார். GT தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராக ஓபிஎஸ் ஆகி விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்திருக்கிறார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் இணக்கம் காட்டி வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்துவிட்ட நிலையில் ஓபிஎஸ் கூட்டணியமைத்து போட்டியிடுகிறார். இதனால் அவரை கேலி செய்யும் வகையில் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.
“ஓட்டுக்குப் பணம் கொடுப்பது மட்டும் குற்றமல்ல. வாங்குவதும் குற்றம்தான்” என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் சாகு பேட்டியளித்தார். அப்போது இந்தத் தகவலை கூறிய அவர், அடுத்த 2 நாள்களுக்கு வாக்குக்குப் பணம் கொடுப்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என மூத்த அரசியல் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவரான அவர், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ரஜோரி தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், திடீரென தனது முடிவிலிருந்து பின்வாங்கிய அவர், தனக்கு பதிலாக தனது வழக்கறிஞர் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியிருக்கிறது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கியூஷு மற்றும் ஷிக்கோக்கு தீவுகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு 87.7% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, மொத்த தேவையில் 87.7% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது. இது அதற்கு முந்தைய நிதியாண்டில் 87.4%ஆக இருந்தது. அதே நேரம், கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்க்கு செலவிட்ட தொகை 157.5 பில்லியன் டாலரில் இருந்து நடப்பு நிதியாண்டில் 132.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. மொத்த இறக்குமதி 232.5 மில்லியன் டன் ஆகும்.
Sorry, no posts matched your criteria.