India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த கவனத்துடன் விளையாடுவோம் என்று RCB அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃப்ளவர் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், புள்ளிகள் பட்டியலில் 10ஆவது இடத்தில் நிற்போம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. RCB அணியால் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வர முடியும் எனக் கூறினார்.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பின்மை மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாததால், அரசுப் பணிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
GT-க்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற DC அணி பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 1. குறைந்த பட்ச ஸ்கோரில் (89 ரன்கள்) எதிரணியை வீழ்த்திய அணிகளின் வரிசையில் முதலிடம். 2. 17ஆவது சீசனில் பவர் பிளே ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த அணிகளின் வரிசையில் முதலிடம் (13). 3. குறைந்த ஓவர்களில் 90+ சேஸிங் செய்த அணிகளில் 3ஆவது இடம்.
*மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்காது – சச்சின் பைலட்
*தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
*2023-24இல் $9.56 பில்லியன் மின்னணு பொருள்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.
*டைம் இதழின் ‘டாப்-100’ பட்டியலில் சாக்ஷி மாலிக் இடம்பிடித்துள்ளார்.
*இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – அமெரிக்கா
▶ஏப்ரல் – 18 | ▶ சித்திரை – 05
▶கிழமை: வியாழன் | ▶திதி: தசமி
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை
▶சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
2023-24 ஆம் நிதியாண்டில் $9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருள்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84% பங்களிப்பு செய்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு $1.86 பில்லியன் டாலராக இருந்தது.
PBKS அணியின் கேப்டன் ஷிகர் தவான் தனது மகனுக்காக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இன்ஸ்டா பதிவில், “நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்…” என குறிப்பிட்டு தனது மகனின் பெயர் (ஜோரவர்) பதிந்த ஜெர்சியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஜோரவர், தவானை பிரிந்து அவரது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
தமிழகத்தில் நேற்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா & கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பாஜக வேட்பாளர் வினோஜ் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து & ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்த பின் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்படுகிறது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மலர் குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. ரோஜா இதழ்கள், மகிழம் பூ, ஆவாரம் பூ, பன்னீர் பூ, மல்லிகைப்பூ, சாமந்தி பூ, ரோஸ்மேரி பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் & துர்நாற்றம் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
Sorry, no posts matched your criteria.