India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகள், வியாபாரிகள் என மக்களில் ஒவ்வொரு பிரிவினரும் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சைபாயில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மிக மோசமாகத் தோற்கப்போவதாகக் கூறினார். மேலும், பாஜக பல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நிவின் பாலி, நயன்தாரா நடிக்கும் ‘டியர் ஸ்டூடென்ட்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்திற்கு பிறகு, இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். பள்ளிக்கூடத்தில் நடக்கும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை, நிவின் பாலி தயாரிக்கிறார்.
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் கைகள் உடைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியதில், வலது கை உடைந்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்தார். அத்துடன், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் 1 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 39.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 45.88%, பிஹார் 36.69%, சத்தீஸ்கர் 46.14%, கோவா 49.04%, குஜராத் 37.83%, கர்நாடகா 41.59%, மத்திய பிரதேசம் 44.67%, மகாராஷ்டிரா 31.55%, உத்தரப் பிரதேசம் 38.12%, மேற்குவங்கம் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில், அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம், மரண வாக்குமூல கடிதம் குறித்தும், இருவருக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உரிய பதிலளிக்க முடியாத அவர், ஜெயக்குமார் மரணத்தில் இருந்துதான் மீண்டு வரவில்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
வெயில் தாக்கம் காரணமாக, மாநிலம் முழுவதும் மின்தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஒரு சில இடங்களில் மின் கட்டமைப்பில் இடையூறுகள் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்து, அதிக நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனக் கூறிய அவர், நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது என்றார்.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.5.49 லட்சம் கோடி மதிப்பை இழந்துள்ளனர். மதியம் 1 மணி நிலவரப்படி, நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து, 22,242 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து, 73,294 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.403.39 லட்சம் கோடியில் இருந்து ரூ.397.9 லட்சம் கோடியாக சரிந்தது.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்காக, நேற்று தனி விமானம் மூலம் கொல்கத்தா வீரர்கள் புறப்பட்டனர். ஆனால், பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு கவுகாத்திக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பயணம் தடைபட்டதால், இன்று வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று, கொல்கத்தா வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் மீண்டும் கொல்கத்தா புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
காங்., நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றிய போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் நிறுவனப் பங்கின் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து, 52 வாரத்தில் இல்லாத அளவில் ₹1,349.65 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு முன்னதாக, கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நிகர நஷ்டம் ₹1,893 கோடியாக இருந்தாலும், வருவாய் 6% உயர்ந்து ₹3,385.61 கோடியாக இருந்தது. இந்தியா, இந்தோனேஷியாவில் இதன் வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.