India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் வெளியிட்டது போல் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று பரவியது. அதில், விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளராக பாக்யராஜை நிறுத்தியதில் தனக்கு விருப்பம் இல்லை என இபிஎஸ்-க்கு அவர் எழுதியது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கை போலியானது என்றும் அதனை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூரில் போட்டியிடும் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்புப் புகாரை தெரிவித்துள்ளார். குடியாத்தம் சந்தையில், கட்டாயப்படுத்தி பழ ஜூஸ், மோர் கொடுத்தாங்க. அதை குடித்த உடனே மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. தற்போது, விஷ முறிவு சிகிச்சைக்குப் பின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால், இன்று பிற்பகல் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவி வகிக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளராகத் தாம் பதவி வகித்ததைச் சுட்டிக்காட்டி, அக்கட்சிக்கு ஓபிஎஸ் உரிமை கோருகிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் நிலையில், ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது, 2 தரப்பும் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கவில்லை. இது அரசியல் ஆர்வலர்களை யோசிக்க வைத்துள்ளது.
ரிலையன்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி நிர்வகிக்கிறார். இதனிடையே, பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் 145 கடைகளை நடத்தி வரும் சில்லறை மளிகைச் சங்கிலி நிறுவனமான ‘24 செவன்’ நஷ்டத்தில் இயங்குவதால் அதனை விற்பனை செய்யும் முடிவுக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அதன் உரிமையாளர் காட்ஃபிரே ஃபிலிப்ஸ் உடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அண்ணாமலை வெற்றிக்காக பாஜக நிர்வாகி கைவிரலை துண்டித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவரான துரை ராமலிங்கம், கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டுமென கத்தியபடி இடதுகை ஆள்காட்டி விரலை வெட்டித் துண்டித்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவகிரகங்களில் சுப கிரகமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தி, குருபகவனாக வணங்கப்படுகிறார். அவரை வழிபடுவதற்கு உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம், அவரை நினைத்து இருக்கும் விரதம், குரு வார விரதமாகக் கூறப்படுகிறது. இந்த விரதம் இருந்து, மஞ்சள் நிற ஆடை அணிந்து அவரை வழிபட்டால், மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
▶மும்பை- 5.3 ஓவர்களில் 68 vs KKR (2008) ▶கொச்சி- 7.2 ஓவர்களில் 98 vs RR (2011) ▶பஞ்சாப்- 7.5 ஓவர்களில் 68 vs DC (2017) ▶ஐதராபாத்- 8 ஓவர்களில் 69 vs RCB (2022) ▶பெங்களூரு- 8.1 ஓவர்களில் 92 vs PBKS (2018) ▶மும்பை- 8.2 ஓவர்களில் 94 vs RR (2021) ▶டெல்லி- 8.5 ஓவர்களில் 90 vs GT (2024) ▶கொல்கத்தா- 10 ஓவர்களில் 93 vs RCB (2021) ▶டெல்லி- 10.3 ஓவர்களில் 116 vs PBKS (2022)
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினரும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10,000 போலீசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் இருந்து இந்திய படையினரை வெளியேறும்படி கூறியதால் இந்தியா உடனான நல்லுறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் நடந்த முய்சு வங்கி கணக்கு பரிவர்த்தனை அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முய்சு மறுத்த போதிலும், விசாரணைக்கும், தகுதிநீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Sorry, no posts matched your criteria.