India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன. இதுதொடர்பான வழக்கில், புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் நாளுக்கு நாள் மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் நாம் கண்டிப்பாக மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் *வீடுகளில் தேவையில்லாமல் எரியும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம் *ஏசியை 26 டிகிரியில் வைக்கலாம் *பகலில் மின் விளக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் *அலுவலகங்களில் பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்களைப் பயன்பாடு இல்லாத போது அணைத்து வைக்கலாம்.
வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பல இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். எனவே, அனைவரும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, உலகம் கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். அனைவரும் வாக்களிப்பீர்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் வெப்பம் இருப்பதால் குளிர்சாதனப் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று (17.4.24) ஒரேநாளில் மின்நுகர்வு 442.74 மில்லியன் யூனிட் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏப்.5இல் 441.18 மில்லியன் யூனிட் ஆக இருந்த மின் நுகர்வு நேற்றுப் புதிய உச்சத்தை எட்டியது.
டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் கோலியும், ரோஹித்தும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இதற்கு விளக்கமளித்த அவர், அப்படியொருச் சந்திப்பு நடக்கவே இல்லை. பிசிசிஐயைச் சேர்ந்தவர்கள் யாராவது கேமரா முன் வந்து பேசாத வரை, இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
அரசியலில் எதிரெதிர்த் துருவங்களாக இருந்த பாஜக, டிடிவி தினகரனின் அமமுக 2024 தேர்தலில் ஓரணியில் போட்டியிடுகின்றன. இதேபோல், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கியவர் ஓபிஎஸ். அவர் தனது சொந்த ஊர் அமைந்துள்ள தேனி தொகுதியை டிடிவிக்கு விட்டுக் கொடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இதுபோல், 2024 தேர்தலானது, எதிரெதிர்த் துருவங்களாக இருந்தோரை ஓரணியில் இணைத்துள்ளது.
தொடர் விடுமுறையையொட்டிப் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவைக்கு விமானக் கட்டணம் ரூ.3,674லிருந்து (ரூ.5000க்கும் மேல் உயர்வு) ரூ.8,555 முதல் ரூ.12,716 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், மும்பை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஏப்.17, 18ஆம் தேதிகளில் நாள் ஒன்றுக்கு 2,970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், நேற்று மட்டும் 1.48 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று பயணம் செய்ய 46,503 பேர் தற்போது வரை முன்பதிவு செய்துள்ளனர்.
இம்பேக்ட் பிளேயர் (Impact Player) விதியில் எனக்கு உடன்பாடு இல்லை என மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை உள்ளடக்கியதே தவிர, 12 வீரர்களை அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக, போட்டியின் விதிகள் மாற்றப்படுகிறது. இதனால், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்-ரவுண்டர்கள் பந்துவீச முடியாமல் போகிறது என வருத்தம் தெரிவித்தார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்திக்கவே, 10 ஆண்டுகளுக்கும் மேல் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள வடிவேலு, மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் பிரசாரம் செய்யவில்லை. அவர் ஒதுங்கியிருந்தாரா, திமுக வலியுறுத்தவில்லையா என்பது தெரியவில்லை.
Sorry, no posts matched your criteria.