India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இவிஎம், விவிபேட் செயல்பாடு குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலுக்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் தகவலுக்கும் இடையே ஏன் முரண்பாடு உள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முன்னதாக நடந்த மாதிரி வாக்குப்பதிவு சரியாக நீக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவ்வாறு நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில், நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் முஸ்தஃபிசூர் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜலால் யூனுஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், முஸ்தஃபிசூரின் ஃபிட்னஸ் குறித்து தான் எங்களுக்குக் கவலை. அவர் 100% ஃபிட்டாக இருக்க வேண்டும். CSK அணிக்கு அவருடைய ஃபிட்னஸ் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வேண்டுமானால் அவரிடமிருந்து CSK வீரர்கள் கற்றுக் கொள்ளட்டும் என விமர்சித்துள்ளார்.
2004இல் செல்லமே மூலம் அறிமுகமாகி, 20 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் விஷால். 2018இல் வெளியான இரும்புத்திரை, சண்டைக்கோழி 2க்குப் பிறகு வந்த 7 படங்களுக்கும் போதிய வரவேற்பில்லை. இந்தச் சூழ்நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்கப்போவதாகக் கூறியுள்ளார். இதைப் பார்த்த திரையுலகத்தினர், படத் தோல்வியால் அரசியலுக்குச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால் உண்மைக் காரணத்தை விஷாலே அறிவார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட 968 இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமுள்ளோர் <
தேர்தல் விதிகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரசாரம் செய்ததாக, தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் பேரில், சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரிஷப் பண்ட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக பேட்டிங் செய்து வந்த அவர் தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தி வருகிறார். குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், 2 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். குறிப்பாக, 2 கேட்சுகளையும் அவர் பறந்து பிடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாகத் தகவல் கசிந்துள்ளது. கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ள சிம்பு, அப்படத்திற்காக 60 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு கமல் படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தை முடித்தப் பிறகே, ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய மல்யுத்தச் சங்கத் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததான புகாரில், அவர் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் கூடுதல் விசாரணைக் கோரி பிரிஜ் பூஷன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது ஏப்.26இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனிடையே, வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 2019 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் வென்றது. பாஜக 3.66% வாக்குகளை மட்டும் பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. வழக்கத்தைவிடப் பிரதமர் மோடி அதிக முறை சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அவரின் பிரசாரம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி ஈட்டித் தருமா? தராதா? என்பது தெரியவில்லை.
Sorry, no posts matched your criteria.