India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் இந்தியா மீதான மரியாதை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். எல்லைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன. நக்சல், தீவிரவாதிகள் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் தீவிரவாதம் அதிகரித்ததாக தெரிவித்தார்.
செரிலாக் மாவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கப்படுவது குறித்து நெஸ்லே விளக்கம் அளித்துள்ளது. அதில், குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் கடந்த 5 ஆண்டுகளில் 30% குறைத்துள்ளோம் என்றும், வருங்காலத்தில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தங்களது தயாரிப்புகள் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைத் தருமென்று நம்புவதாகவும் நெஸ்லே குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல்லில் அதிகபட்சமாக சிஎஸ்கே வீரர் தோனி 256 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2ஆவது அதிகபட்சமாக மும்பை வீரர் ரோஹித் ஷர்மா, ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் 249 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதற்கு அடுத்து ஆர்சிபி வீரர் கோலி 244, சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா 232 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் ரோஹித், கார்த்திக், கோலிக்கு இந்த சீசனில் 250ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு வாக்கிற்கு 2 வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
வாக்காளருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க முடியுமா எனத் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டை ஒப்பிட்டுப் பார்க்கக்கோரித் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஆணையம், அது மிகப்பெரும் ஆபத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பது விவிபேட் திரையில் 7 வினாடிகள் தெரியும் என்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில், தோனியும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், தோனி 20(4) ரன்களும், தினேஷ் கார்த்திக் 83(35) ரன்களும் குவித்தனர். தோனியை உலகக் கோப்பையில் விளையாட வைப்பது கடினம். ஆனால், தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது எனத் தெரிவித்தார்.
நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செரிலாக்கில் விதிகளுக்கு மாறாகச் சர்க்கரையை சேர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்பருமன், பிற நோய்களைத் தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, இந்தியாவில் 3 கிராம் அளவு சேர்ப்பதும், வளர்ந்த நாடுகளில் சேர்ப்பதில்லை என்றும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் சென்னை ஐகோர்ட் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறாக வழிநடத்த முயற்சித்ததாக நிர்மலா தேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகார் மீது 6 ஆண்டாக எடுத்த நடவடிக்கை என்ன? என்றும், புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஜூன் 7க்குள் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பிட் காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டியின் பங்களாவை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிட்காயின் திட்டம் மூலம் ரூ.6,600 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மும்பை ஜூஹூவில் உள்ள பங்களா, புனேவில் உள்ள பங்களா, ஷில்பா கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் ஆகியவற்றை முடக்கியுள்ளது.
காங்கிரசை பாஜகவின் B-Team என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாஜகவை சித்தாந்த ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ எதிர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், ஏனெனில் பாஜகவின் B-Teamஆக காங்கிரஸ் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். கருத்து கணிப்புகள் குறித்த கேள்விக்கு, அவை புனையப்பட்டவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்று அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.