India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் “விண்டேஜ் லவ்…” பாடல் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.
டெல்லியில் பேருந்தில் பெண் ஒருவர் பிகினி உடையில் பயணித்தச் சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தின் கதவு அருகே நின்றபடி அந்தப் பெண் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவருக்கும் ஆடை சுதந்திரம் இருந்தாலும், பொது வெளியில் கண்ணியமான ஆடை அணிய வேண்டியது அவசியம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாபில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலின் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. இரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 6 தோல்வி பெற்றுள்ள நிலையில் பஞ்சாப் 8 ஆவது இடத்திலும், மும்பை 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
விமான நிலையத்தில் வீடியோ எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த விகாஸ் கவுடா என்ற இளைஞர் சென்னை செல்லும் விமானத்திற்கான டிக்கெட்டுடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவர் விமானத்தில் பயணிக்காமல் ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி வீடியோ எடுத்துள்ளார். இதனிடையே, பல்வேறு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கட்டுமானப் பணிகளைச் சட்டவிரோதமாகத் தொடங்கியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச சேவை அளிக்க உள்ளதாக ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்குச் சாவடி மையங்களுக்குச் செல்லும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் அனைவரும் 100% ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் நாளை ஒரு நாள் இலவச சேவை என ரேபிடோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜக நாட்டைப் பிளவுப்படுத்த நினைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவின் கோட்டயத்தில் பிரசாரம் செய்த அவர், ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தலைவர், ஒரே மதம் என்று பிரதமர் பேசுவதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களை தமிழ் பேசாதே, கேரள மக்களை மலையாளம் பேசாதே என எப்படி கூற முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
துபாயில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், துபாயில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +971501205172, +971569950590, +971507347676, +971585754213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில் சிங்கங்களின் பெயரை மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அக்பர் சிங்கத்திற்கு சூரஜ் என்றும், சீதா சிங்கத்திற்கு தயா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாகத் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கிகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்காது. அதே சமயத்தில் பால், குடிநீர், மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், பேருந்து போக்குவரத்துக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.