India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018இல் வெளியான படம் ‘கனா’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து சில நிஜ கிரிக்கெட் வீராங்கனைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் சஜனா சஜீவன். தற்போது இவருக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடர் ஏப்.20 இல் தொடங்குகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பான் இந்தியா அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்குத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் ரூ.275 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் ரூ.170 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் பொறுமையாக ஆடிவரும் மும்பை வீரர் சூர்யகுமார் அரை சதம் கடந்துள்ளார். 34 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 50* ரன்கள் அடித்துள்ளார். மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 36* ரன்களுடன் களத்தில் உள்ளார். இஷான் கிஷன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தற்போது வரை MI அணி 11 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை – திருச்சி இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று (ஏப்ரல் 18) இரவு 10:05 மணிக்கு புறப்படும் ரயில் (எண்-06031) நாளை காலை 6:30 மணிக்கு திருச்சியை அடைகிறது. மறுமார்க்கத்தில் நாளை (ஏப்.19) இரவு 8:30 மணிக்கு கிளம்பும் ரயில் (எண்-06032) மறுநாள் காலை 2:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச் சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பாகவே அங்கிருக்கும் வரிசையின் நிலையை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. <
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை தொடங்கவுள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றை தீர்மானிப்பதில் நாளை நீங்கள் செலுத்தப் போகும் ஒற்றை வாக்கு மிகப்பெரிய பங்காற்றவுள்ளது. ஒரு விரலினைக் கொண்டு நாட்டின் தலையெழுத்தையே மாற்றலாம். நாளைய தினம் வாக்களிக்க தவற வேண்டாம்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் “அச்சச்சோ…” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதி ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து மே 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலர் வீட்டை மாற்றுவதைப் போல ஒருவர் குடும்பத்தையே மாற்றியுள்ளார் என ராகுல் காந்தியை தாக்கி பேசியுள்ளார் ஸ்மிருதி இரானி. இது குறித்து பேசிய அவர், ‘அமேதி தொகுதியை பிரதிநித்துவப்படுத்தியவர், தற்போது ஒவ்வொரு முறை அறிக்கை வெளியிடும்போதும் வயநாடு என் குடும்பம் என்கிறார்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்., கட்சியினர் அமேதி தொகுதிக்காக ஸ்மிருதி செய்த நன்மைகள் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? என்பதை ஏற்கெனவே அறிய முடியும். சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை கிளிக் செய்யும் போது அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்ளலாம். தற்போது வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வசதியின்படி, யார் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தார்கள் என்பதைப் பார்க்க முடியும். இந்த வசதி சோதனை முறையில் உள்ளது.
மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன் தபால் ஓட்டு போட்டார். பின் சிறிது நேரத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மரணிக்கும் தருவாயிலும் அவர் ஜனநாயகக் கடமையாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Sorry, no posts matched your criteria.