News April 19, 2024

மகாபாரதம் கதையை படமாக எடுக்கும் லிங்குசாமி

image

மகாபாரதம் கதையை தழுவிய புராணப் படமொன்றை லிங்குசாமி இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாம். அர்ஜுனன் & அவனது மகன் அபிமன்யுவை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு கதை எழுதும் வேலையை எழுத்தாளர் ஜெயமோகன் கவனித்து வருகிறார்.

News April 19, 2024

IPL: சென்னை – லக்னோ அணிகள் இன்று மோதல்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற உள்ளது. இதில், LSG , CSK அணிகள் மோதவுள்ளன. நடந்து முடிந்த 6 போட்டிகளில் CSK 4 போட்டிகளிலும், LSG 3 போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முறையே 2 ஆவது & 5 ஆவது இடங்களில் உள்ளன. MI-க்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி அடைந்த CSK அணி, அதே பாதையில் பயணிக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News April 19, 2024

பாஜகவின் ‘பி’ டீமாக காங்கிரஸ் சீரழிந்து வருகிறது

image

மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து வெகுவாக விலகிவிட்ட காங்கிரஸ் பாஜகவின் ‘பி’ டீமாக மாறி சீரழிந்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், பாஜக உடனான காங்கிரஸின் போட்டி தேர்தல் அரசியல் & அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியாகவே உள்ளது. கேரளாவில் பாஜக வேட்பாளர்களில் 4இல் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர்” என்றார்.

News April 19, 2024

ஏப்ரல் 19 வரலாற்றில் இன்று!

image

➤1506 – லிஸ்பனில் போர்த்துக்கீசியர்களால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. ➤1882 – உயிரியலாளர் சார்லஸ் டார்வின் பிறந்த நாள். ➤1975 – இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤1988 – ஐ.பி.கே.எஃப்-க்கு எதிராக உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி மறைந்த நாள். ➤2006 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடித்தது.

News April 19, 2024

ஏழை நாடாகவே இந்தியா இருக்கும்

image

2029ஆம் ஆண்டுக்குள் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தாலும், இந்தியா ஏழை நாடாகவே இருக்கும் என ஆர்பிஐ முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சவுதியை உதாரணமாக பாருங்கள். பணக்கார நாடாக மாறுவதற்கு, வளர்ந்த நாடாக மாற வேண்டிய அவசியமில்லை. பிரிக்ஸ் & ஜி 20 நாடுகளிலும், இந்தியா மிகவும் ஏழ்மையாகவே உள்ளது. வளர்ச்சி விகிதத்தை விரைவுபடுத்த வேண்டும்” என்றார்.

News April 19, 2024

ஐ.நா அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய ஆதரவு

image

ஐ.நா பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா., உறுப்பு அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய நாங்கள் நிச்சயம் ஆதரவு தெரிவிப்போம். அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க முடியாது என்றார்.

News April 19, 2024

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த தேவா

image

நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்துவரும் ராயன் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு வந்த வாய்ப்பை இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “வடசென்னை தமிழில் நான் நன்றாக பேசுவதால், காசிமேடு பகுதியை மையப்படுத்திய ‘ராயன்’ படத்தில் வில்லனாக நடிக்க முடியுமா என என்னிடம் கேட்டார்கள். ஆனால், நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. தெரியாத தொழிலை நான் எப்போதுமே செய்ய மாட்டேன்” என்றார்.

News April 19, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6
▶குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
▶பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

News April 19, 2024

ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ரா

image

நேரம் குறைவு, இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்ற காரணங்களால் டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாக மாறியுள்ளதாக MI அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின் பேசிய அவர், “டி20 கிரிக்கெட் போட்டியில், பந்து 2 ஓவர்களிலேயே ஸ்விங் ஆகும். பேட்டிங் வரிசையும் ஆழமாகியுள்ளது. நான் அதிகமாக பந்து வீச விரும்புபவன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும்” என்றார்.

News April 19, 2024

தேர்தல் அல்ல; நாட்டை காக்கும் போராட்டம்

image

2024 மக்களவைத் தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல; நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான போராட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், “வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே மோடி அரசு ஒரு தடையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!