India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச நாடுகள் அனுப்பி வரும் உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிக்குள் உதவிகளை அனுப்புவது பெரும் சவாலாக உள்ளதாக பாலஸ்தீன அதிபர் முகமது முஸ்தபா கவலை தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட தான் ஆர்வமாக உள்ளதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து மைக்கேல் வானுக்கு அளித்த பேட்டியில், இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் விளையாடுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. நான் முழுவதும் கிரிக்கெட்டை பற்றியே பேசுகிறேன். வேறு விஷயங்களை புகுத்த வேண்டாம். இங்கு பேட், பந்துக்கு மட்டுமே பங்கு உண்டு எனக் கூறினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாதவர்கள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகனம் அனுப்பி வைக்கப்படுமாம்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்கும் கடைசி நபர் வாக்களிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஜனநாயக கடமையை நிறைவேற்ற விரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
▶ஏப்ரல் – 19 | ▶ சித்திரை – 06
▶கிழமை: வெள்ளி | ▶திதி: ஏகாதசி
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: காலை 10:30 – 12:00 வரை
▶எமகண்டம்: பிற்பகல் 03:00 – 04:30 வரை
▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை
▶சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டு விதியைத் தீர்மானிக்கும் தேர்தல் இது என்பதை அழுத்தமாக உங்கள் மனதில் வையுங்கள். ஜனநாயகத்தைக் காக்க இன்று ஒருநாள் நேரத்தை வாக்குச்சாவடியில் செலவிடுங்கள். அடையாள அட்டையோடு செல்லுங்கள். வாக்கு செலுத்தும்போது, வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தெளிவாக பாருங்கள். நீங்கள் வாக்களிக்கும் சின்னம்தான் ‘விவிபேட்’ இயந்திரத்திலும் காட்டுகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிற இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ & கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்க கூகுள் $1.2 பில்லியனுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதை எதிர்த்து நியூயார்க் & கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் ஊழியர்கள் மேல் தர்ணா செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது இந்த சிறப்பு டூடுலில், Google என ஆங்கில மொழியில் உள்ள இரண்டாவது ‘O’-வுக்கு பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
‘டைம்’ இதழ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள் பட்டியலில் சாக்ஷி மாலிக் (31) இடம்பிடித்துள்ளார். ‘டைம்’ இதழ் வெளியிட்ட குறிப்பில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை சாக்ஷி மாலிக். பெண்கள் & குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிராக போராடிவரும் அனைவருக்கும் சாக்ஷி முன்னுதாரணமாகத் திகழ்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது.
வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகமுக்தி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. வெட்டிவேர், பதிமுகம், கருங்காலி, நன்னாரி, சுக்கு போன்றவற்றின் தொகுப்பான தாகமுக்தி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம். இந்தக் குடிநீர் சிறுநீர் எரிச்சலுக்கும் தீர்வளிக்கும்.
Sorry, no posts matched your criteria.