India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் ₹1,000 கோடிக்கும் மேல் திமுக, அதிமுக வாரி இறைத்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்திருப்பதாகவும், ஆனால் பாஜக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். பாஜக பணம் அளித்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாரென்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் கேப்பை மும்பை வீரர் பும்ரா பெற்றுள்ளார். பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில், (13) பும்ரா முதலிடத்தில் உள்ளார். 2.சாஹல்-12, 3.கோட்ஸி-11, 4.கலீல்-10, 5.ரபாடா-10 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா (89) உடல்நலக்குறைவால் காலமானார். தொடுவானம், படி தாண்டிய பத்தினிகள், அவசரக் கோலங்கள், மன விலக்கு, பெண்களின் சிந்தனைக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நாவல்களும், அம்மாவின் சொத்து, வெகுளிப் பெண் போன்ற பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், பிரபு, தனுஷ், ரஜினி, விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், செல்வராகவன், கமல், இளையராஜா, விஜய் குமார், சினேகா, பிரசன்னா, வரலக்ஷ்மி, அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் வாக்கு செலுத்தியுள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,890க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.90க்கும், கிலோ வெள்ளி ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், வரும் மே 3ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘குணா’ குகையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், கடந்த பிப். 22ஆம் தேதி திரைக்கு வந்தது. குறிப்பாக, தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் மூலம், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்தப் படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதேபோல் பெல்ஜியம், எஸ்தோனியா, வெனிசுலா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், மாலத்தீவு, நமீபியா, எகிப்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் மின்னணு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் வாக்குச்சீட்டு அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது.
Vote என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வார்த்தை முதலில் vōtum என்று இருந்திருக்கலாம், பிறகே Vote என்று மருவி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கிரேக்க கடவுடளுடன் செய்த ஒப்பந்தத்துக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Vote என்பது, தேர்தல் அல்லது கூட்டத்தில் போட்டியிடுபவரை விருப்ப அடிப்படையில் ஒருவர் தேர்வு செய்வது என்பது அர்த்தமாகும்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 8.59% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதிய தலைமுறை வாக்காளர்கள் பலர் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளராக ஹிமாச்சலைச் சேர்ந்த ஷியாம் சரண் நெஹி கருதப்படுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, மக்களவைக்கு முதல்முறையாக 1951 முதல் 1952 வரை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முதல் நபராக பள்ளி ஆசிரியரான நெஹி தனது வாக்கை பதிவு செய்தார். இதனால் அவரே நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார். 2022இல் 105 வயதில் காலமாகும் வரை அவர் 34 தேர்தல்களில் வாக்களித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.