News April 19, 2024

வாக்களித்து வீட்டீர்களா, உடனே சென்று விடாதீர்கள்

image

தேர்தலில் வாக்குப்பதிவு செய்துவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவிஎம் இயந்திரம் அருகில் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதில் வெளிவரும் சீட்டை பார்த்து தங்கள் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அதன்பிறகு வாக்காளர்கள், சாவடியை விட்டு செல்வதே சிறப்பு.

News April 19, 2024

வாக்களிக்காவிடில் விடுமுறை ரத்து

image

விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை, டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிக்காத ஊழியர்கள் விடுப்புக்கணக்கில் இருந்து ஒருநாள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

News April 19, 2024

கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை

image

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு முன்பு எத்தனை நபர்கள் வந்தாலும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதன்பின் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலை புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

News April 19, 2024

1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08%, கள்ளக்குறிச்சியில் 44% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடலூர் 37.84%, வேலூர் 39.58%, ஈரோடு 43.54%, ராமநாதபுரம் 40.90% வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31% வாக்குகள் பதிவாகி உள்ளன.

News April 19, 2024

சூர்யா, கார்த்திக், சிவக்குமார் வாக்களித்தனர்

image

மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே வாக்கு செலுத்திய நிலையில், தற்போது நடிகர் விக்ரம், ராகவா லாரன்ஸ், பிரஷாந்த், சிபி, பாபி சிம்ஹா, பார்த்திபன், சேரன், அமீர், நட்டி நடராஜன் உள்ளிட்ட பலர் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

News April 19, 2024

தேர்தல்: வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

image

மக்களவைத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர்களுக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் நாட்டின் ஜனநாயகம், வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக நாட்டின் ஆன்மா மீது ஏற்படுத்தப்பட்ட புண்கள் மீது வாக்கு என்னும் சக்தியை செலுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 19, 2024

வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடுகள் (1)

image

துருக்கியில் 1986 முதல் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி வாக்களிக்கவில்லையெனில், 8 யூரோ அபராதம் விதிக்கப்படும். பொலிவியாவில் முதல்முறை வாக்களிக்கவில்லையெனில் அபராதமும், தொடர்ந்து தவிர்த்தால் வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் முதலில் வாக்களிக்கவில்லை என்றால் 20 டாலர் அபராதம், தொடர்ந்து தவிர்த்தால் சிறை தண்டனை விதிக்கப்படும்

News April 19, 2024

வாக்களிப்பதை கட்டாயமாக்கியுள்ள நாடுகள் (2)

image

பெல்ஜியத்தில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கவில்லையெனில் 50 யூரோ அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. லக்சம்பர்க் நாட்டிலும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் 95% வாக்குகள் பதிவாகின்றன. இத்தாலியில் வாக்களிப்பது மக்கள் பணி என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 19, 2024

வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்த அஜித், விஜய்

image

அஜித், விஜய் ஆகியோர் வாக்களிக்க ஒரே நிற உடையில் வந்தது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தது. திரையுலகில் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக கருத்து உண்டு. இந்நிலையில், நடிகர் அஜித்குமார் காலை 7 மணிக்கு முதல் ஆளாய் வந்து வாக்களித்தார். அப்போது வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். மதியம் 12.30 மணிக்கு விஜய் வாக்குப்பதிவு செய்தார். இதை கண்ட ரசிகர்கள், சட்டை நிறத்திலுமா போட்டி என கலாய்க்கின்றனர்.

News April 19, 2024

ஜனநாயகக் கடமை ஆற்றிய திரைப் பிரபலங்கள்

image

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தற்போது, நடிகை த்ரிஷா, கார்த்திக், பாரதிராஜா, லிங்குசாமி, யோகி பாபு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் வாக்களித்தனர். G.O.A.T படக்குழுவுடன் சென்னை திரும்பிய நடிகர் விஜய், இன்னும் சற்று நேரத்தில் வாக்களிக்க உள்ளார்.

error: Content is protected !!