India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2 நாள்கள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார் CM ஸ்டாலின். அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இப்பயணத்தை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொள்ளும் CM, மாலை திமுக நிர்வாகிகளைச் சந்தித்தபின் ரோடு ஷோ நடத்துகிறார்.
ENG-க்கு எதிராக 2-வது டெஸ்டில் பேட்டிங்கிலும் கலக்கிய இந்திய கேப்டன் கில்லுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரின் கேப்டன்ஷிப்புக்கு 10/10 மார்க் வழங்குவேன் என Ex. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஒரு இந்திய கேப்டனின் பெஸ்ட் இது எனக் குறிப்பிட்ட அவர், ஆகாஷ் போன்ற ஒரு பவுலரை கரெக்ட்டாக பயன்படுத்தியதற்கு கில்லை பாராட்டியாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை <
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!
பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.
Sorry, no posts matched your criteria.