India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறியலாம் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் ஆட்டம் முடிந்து விட்டதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். சர்ச்சையாகப் பேசியதால் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொறுப்புகளில் இருந்து மாயாவதி நீக்கியது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அவரின் முடிவு தாமதமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வரும் மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் பேடிஎம் இணையதளப் பக்கங்களிலும் தொடங்க உள்ளது. இதில், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. ₹1,700 முதல் டிக்கெட் விலை தொடங்குகிறது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ளன. மொத்தம் 270 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், பலத்த காற்று இடியுடன் மழை பெய்ததால் 100 கேமராக்கள் பழுதானது. இதனையடுத்து, ஒருமணி நேரத்தில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தென்சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் 2 கேமராக்கள் பழுதாகியுள்ளன.
அண்மையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அதில், தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் விளங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். எந்தப் பெயரையும் தமிழ்ப்படுத்த குழு அமைப்போம் என்றும், இது நிறைவேறினால் தெருவெல்லாம் தமிழ் செழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைநகர் சென்னையில் மனிதர்களை நாய்கள் அச்சுறுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்றபோது நாய் கடித்து பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். சமீபத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளதால் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று வேளச்சேரியிலும், இன்று சூளைமேட்டிலும் நாய் கடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கிக் கணக்குக்கு அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. வாடிக்கையாளர்கள் கைரேகையை கேஸ் ஏஜென்சி சென்று பதிய வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கூடுதல் வருவாய் ஈட்டும் சுற்றுலாத் துறையை வளப்படுத்த முயற்சித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா, சீனா உள்பட 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது திடீரென விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், 7 நாடுகளுக்கான இலவச விசா செயல்முறை தொடரும் என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.
நலன்குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கார்த்தி 26’ படத்திற்கு ‘வா வாத்தியாரே’ என்ற பெயரேயை தயாரிப்பு நிறுவனம் இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக்ஷன் மசாலாவாக உருவாகும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இதில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வேடத்தில் கார்த்தி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 70,326 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி நாளாகும். இந்நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மே 28 – 30, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 15 – 20 வரையிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.