India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக கைதான சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கோவை சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவரது தாய், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு, வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
குமரி பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ வேலாயுதம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இச்செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும் கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் என்றும் தன் மீது அளவற்ற பாசத்துடன் பழகியவர் எனவும் நினைவுகூர்ந்துள்ளார்.
காங்., தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்குச் சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்கு சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைக்கு சென்ற ஜெயக்குமார் வீட்டிற்கு வந்த பின், என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமரை பற்றி அதிகம் பேசாத மோடி, தேர்தல் நேரத்தில் ராமரை கையில் எடுத்துள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் பிரசாரம் செய்த அவர், வெற்றி பெற மோடி மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகக் கூறினார். ஓட்டுக்காக அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சிக்கும் பிரதமரின் செயல் அநாகரீகமானது என்றும் அவர் தெரிவித்தார்.
ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் ‘பாபரின் பெயரால்’ ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும் என மோடி குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, மோடி மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய் பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்.
அனைத்து வயதினரும் எளிமையான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வரும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. போட்டியாக எத்தனை செயலிகள் வந்தாலும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக பல ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், வாட்ஸ் ஆப்பும் புதிதாக ‘GameOn’ என்ற பெயரில் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.
தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரது 50ஆவது படமான ‘ராயன்’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை 2வது முறையாக நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இச்சந்திப்பின் போது, தந்தை இறப்பின் போது கூட பேசாமல் இருந்த அண்ணனும் தம்பியும் நீண்ட நேரம் பேசியதாகத் தெரிகிறது. 2014இல் திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டது முதல் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
கோடை விடுமுறையைக் கழிக்க பலரும் தீவுப் பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்காகவே, இந்த ஆண்டுக்கான சிறந்த தீவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவு முதலிடம் பிடித்துள்ளது. தான்சானியாவில் உள்ள சான்சிபார், கிரீஸில் உள்ள கிரீட், கரீபியனில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ, ஸ்பெயினில் உள்ள மஜோர்கா ஆகிய தீவுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
SRH-க்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ராகுலை கடிந்து கொள்ளும் வீடியோ பேசுபொருளாகியுள்ளது. தோல்விக்கு கேப்டன் என்ற முறையில் ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், தனியறையில் நடக்க வேண்டிய இதுபோன்ற நிகழ்வு பொதுவெளியில் நடந்ததை ஏற்கமுடியாது. அவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கோயங்காவுக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.