India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோனியின் நிகர சொத்து மதிப்பு ₹1,030 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், IPL-ல் அவர் தொடர்ந்து வருகிறார். இதில் மட்டும் ₹205 கோடி வருமானம் உள்ளது. இதுதவிர, பல்வேறு சிறு முதலீடுகளால் மாதம் ₹4 கோடி வருவாய் பெறுகிறார். 72 பிராண்டுகளுக்கு அவர் பிராண்டாக உள்ளதன் மூலம் ₹803 கோடி சம்பாதித்துள்ளார். மேலும், தனிவிமானம், 20-க்கும் மேலான உயர்தர பைக்ஸும் அவரிடம் உள்ளன.
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் காலடி எடுத்த வைத்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் மகாநடியாக உயர்ந்து நிற்கிறார். தற்போது இவரின் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படம் விரைவில் தமிழில் வெளிவர இருக்கிறது. அண்மையில் சென்னையில் நடந்த Global Buisness Conclave கலந்து கொண்ட பின் அவர் வெளியிட்ட போட்டோஷூட் ஸ்டில்ஸ் தான் இவை.
CM ஸ்டாலினின், தனிச் செயலாளராக உள்ள சண்முகம் IAS-ன் தாயார் ராஜலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர், ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பெற்ற அன்னையின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் அவரை இழந்து வாடும் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் IND vs ENG 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இன்னும் 18 ரன்களை அடித்தால், ENG-ல் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனை தற்போது வரை Ex. வீரர் டிராவிட்டின் வசம் உள்ளது. அவர் 2002-ல், 6 இன்னிங்ஸில் 602 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குரல் பெண் குரல் போல் உள்ளதால், செந்தில்குமார் சார் தவறாக பேசுகிறார், தொடக்கூடாத இடத்தில் தொடுகிறார் என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார் கரூர், கருப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர். ஆசிரியரின் செயலால் 6 நாட்களாக ஸ்கூலுக்குப் போகவில்லை என்ற அவர், கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளார். மேலும், CM இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
விபத்து நிகழ்ந்து 24 மணி நேரம் கடந்த போதிலும் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் சோகத்தின் தடம் மாறவில்லை. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் செழியன், சாருமதி, நிமிலேஷ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள், ஆசிரியர்கள் சாருமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
போனில் பேஸ்புக், X, இன்ஸ்டா போன்றவற்றில் உள்நுழைய பாஸ்வேர்டை AutoFill செய்து வைச்சிருக்கீங்களா? ஆமாம் என்றால், பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். இப்படி செய்வதால், போனின் OS பாஸ்வேர்ட் மேனேஜ்மேண்டின் குறைவதாக IIT ஹைதராபாத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக சைபர் கிரிமினல் தாக்குதல்களின் வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி உங்களின் பாஸ்வேர்ட் டைப் பண்ண பழகிக்கோங்க.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகை அருணா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், நடிகை அருணாவின் கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ’கல்லுக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.
சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தியில் உள்ள புதுவை CM ரங்கசாமி தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் சுமூக உறவு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், CM பரிந்துரை செய்த அனந்தலட்சுமியை தவிர்த்து கவர்னர் கைலாஷ்நாதன், செவ்வேள் என்பவரை நியமித்துள்ளார். இதனால், தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் அரசு – கவர்னர் இடையே மோதல் தொடங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.