India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவைக் கண்டுள்ளது. இது வரும் நாள்களில் மேலும் சரியும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை சரிவதற்கு பல்வேறு காரணங்களையும் அவர்கள் அடுக்கடுக்காக கூறுகின்றனர். தங்கம் விலை சரியக் காரணம் என்ன? என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

இந்த வார OTT விருந்தாக பல மொழிகளிலும், பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அக்டோபர் 24-ம் தேதி வெளிவரும் படங்களின் லிஸ்ட் ✦சக்தித்திருமகன்(தமிழ்)- ஹாட்ஸ்டார், ✦அக்யூஸ்ட் (தமிழ்)- ஆஹா ✦பறை இசை நாடகம்(தமிழ்)- சன் NXT ✦OG(தெலுங்கு)- நெட்பிளிக்ஸ் ✦வல்சாலா கிளப்(மலையாளம்)- Manorama Max ✦Weapons(ஆங்கிலம்)- HBO MAX ✦The bike riders(ஆங்கிலம்)- அமேசான் ப்ரைம். நீங்க எந்த படம் பாக்க போறீங்க?

கூகுள் பே, Phonepe-வுக்கு போட்டியாக Zoho Pay என்ற செயலியை Zoho நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம், பணத்தை பல மடங்கு பாதுகாப்போடு அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே Zoho-வின் அரட்டை செயலியை வைத்திருந்தால், அதன் மூலமாகவும் பணம் அனுப்பும் வசதியை கொண்டுவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் கடன்கள், காப்பீடுகள் கூட வழங்கப்பட இருக்கிறதாம்.

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அடுத்த 48 – 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில், தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.

பிரபல கார்ல்ஸ்பெர்க் மதுபான நிறுவனம், உலகின் மிகச்சிறிய பீர் பாட்டிலை தயாரித்துள்ளது. வெறும் 12 மி.மீ. உயரமுள்ள இந்த பாட்டிலில் 1 துளி ஆல்கஹால் அல்லாத பீர் மட்டுமே இருக்கிறதாம். பொறுப்புடனும், குறைந்த அளவில் மது குடிப்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்த, இதனை உருவாக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஒருபுறம் விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பிய நிலையில், நம்பிக்கை தரும் வகையில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். ODI பார்மெட்டில் ஆஸி., அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை இன்று ரோஹித் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் விராட் கோலி 802 ரன்களுடன் உள்ளார். ரோஹித் 73 ரன்களில் அவுட்டான போதும், இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்.

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார். அதேபோல், சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர் வெங்கடகோபு அறிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தொடக்கத்திலேயே கில் & கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் ரோஹித்தும், ஷ்ரேயஸும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து நம்பிக்கையூட்டினர். இந்திய அணி தற்போது வரை 28.2 ஓவர்களில் 130/2 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ODI ஆட்டத்திலுமே விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக டக் வாங்கிய இந்திய வீரர்கள் பட்டியலில் 40 டக் அவுட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இதனால், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ரசிகர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.