India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று SA மகளிர் அணியை IND மகளிர் அணி எதிர்கொள்கிறது. SL-க்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் அதை தொடரும் முனைப்பில் இந்திய மகளிர் படை உள்ளது. காலை 10 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. முன்னதாக, SA மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்தியா ஒயிட்வாஷ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் மே 4-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30 – 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், சாதி, மதம் என இந்தியர்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சாதி, மதங்களையும் மதித்து ஒற்றுமையான, அமைதியான சமூகமாக நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.
கோடைக்காலத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இறைச்சி வகைகள் குறிப்பாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொறித்த உணவுகள் நீர்ச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். டீ, காபி குடிப்பது சோர்வு, தலைச்சுற்றல், வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். காரசாரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிடுவதை அந்நாடு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் வசம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தை மீட்க ரஷ்ய வீரர்களுக்கு உதவுவதாகவும், அங்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 14,000 வடகொரிய வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் அடிப்படை மனிதத் தன்மையற்றது என ‘ஜெய் பீம்’ இயக்குநா் ஞானவேல் தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள், நோயாளிகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் போரை அறிவிக்க வேண்டும் என தமிழ் இலக்கியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இங்கு சுற்றுலா தளத்தில் பாதுகாப்பில்லை எனவும், சிகிச்சைக்காக வந்த பாக். குழந்தையை வெளியேற்றும் துரதிர்ஷம் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.