News April 21, 2024

₹150 கோடி வசூலை கடந்தது ‘ஆடு ஜீவிதம்’

image

பிரித்விராஜ், அமலாபால் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ படம், உலக அளவில் ₹150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிளெஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளிலேயே ₹7.5 கோடி வசூல் செய்தது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்காக, நடிகர் பிரித்விராஜ் கடினமாக உழைத்துள்ளார். மேலும், மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலுவைத் தொடர்ந்து 3ஆவது ₹100 கோடி படம் என்ற பெருமையை பெற்றது.

News April 21, 2024

தெற்கிலிருந்து பாஜகவுக்கு அஸ்தமனம் ஆரம்பம்

image

ஆளும் பாஜகவுக்கு தெற்கிலிருந்து அஸ்தமனம் ஆரம்பமாக உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2019-இல் மோடி செல்வாக்குள்ள நபராக இருந்தபோதே பாஜக 303 தொகுதிகளைத் தாண்டவில்லை. தற்போது மோடியின் அந்தப் பிம்பம் சிதைந்து போய்விட்டது. 400 இடங்கள் வெற்றி என்பது பாஜகவுக்கு கனவாகவே இருக்கும் என்ற அவர், மீண்டும் மோடி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

News April 21, 2024

பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

image

உ.பியை சேர்ந்த பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் காலமானார். அவர் போட்டியிட்ட மொரதாபாத் தொகுதிக்கு முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அவரது திடீர் மரணம் பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடி, தனது இறுதி மூச்சுவரை பொது மக்களுக்கும், சமூதாயத்திற்கு சர்வேஷ் உழைத்ததாகவும், அவரது மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு எனவும் இரங்கல் தெரிவித்தார்.

News April 21, 2024

17ஆவது திருமண தினத்தை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்

image

17ஆவது திருமண தினத்தை கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதித்யாவுடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். 2 பேருக்கும் திருமணமாகி நேற்றுடன் 17 ஆண்டுகள் ஆனது. இதை அபிஷேக் பச்சன், ஆராதித்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல் அபிஷேக் பச்சனும் அந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

News April 21, 2024

வாக்கு சதவீதம் குறைவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்

image

வாக்கு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே முக்கிய காரணம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் அசட்டையாக இருந்ததுள்ளது. 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பதை எளிதாக கடந்து போ முடியாது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப்பதிவு குறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

சிறையில் பாதி, ஜாமினில் மீதி…

image

INDIA கூட்டணி தலைவர்கள் பாதி பேர் ஜாமினில் வெளியே இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவோம் என ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளன. யார் தவறு செய்தாலும் பிடிபடுவார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் ஊழல் செய்யும் போது இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். தண்டனை அடையும் போது மட்டும் பாஜகவை அவர்கள் குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.

News April 21, 2024

பாஜகவில் ஐக்கியமாகும் மதசார்பற்ற ஜனதா தளம்?

image

அனைத்தும் சீராக செல்லும்பட்சத்தில், பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணையும் என்று அக்கட்சித் தலைவர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானபடி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள குமாரசுவாமி, பாஜக தங்களை நல்லவிதமாக நடத்தினால், அக்கட்சியுடன் தனது கட்சி இணையும், 2 தரப்பும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.

News April 21, 2024

விக்ரம் படத்தில் இணைந்த மலையாள நடிகர் சித்திக்

image

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில், மலையாள நடிகர் சித்திக் இணைந்துள்ளார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பை ஓரிரு நாட்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதைக் களத்தில் இப்படம் உருவாக உள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டைட்டில் வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

News April 21, 2024

உணவருந்திய உடன் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் ஆபத்து

image

ஆரஞ்சுப் பழம், அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். அதில் வைட்டமின் சி சத்துகள் உள்ளன. அதேபோல் சிட்ரஸ் அமிலமும் அதிகம் உள்ளது. அதனால் உணவருந்திய உடனே ஆரஞ்சை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், சிட்ரஸ் அமிலம், உடலில் நச்சுக்களை ஏற்படுத்தி பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆதலால் உணவருந்திய பிறகு ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்போம்.

News April 21, 2024

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்.13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாளை (ஏப்.22) மற்றும் நாளை மறுநாள் (ஏப்.23) ஆகிய தேதிகளில் விடுப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை தொடர்கிறது.

error: Content is protected !!