News May 12, 2024

பாஜகவை தூக்கி எறிந்த கிராம மக்கள்: தேஜஸ்வி யாதவ்

image

மோடி ‘Road’ ஷோ நடத்தும்போது, தாங்கள் ‘Job’ ஷோ நடத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவை கிராம மக்கள் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறிய அவர், போதிய வரவேற்பு இல்லாததால் பிரதமரின் பயணத் திட்டம் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். பிஹாருக்கு 10 முறை வந்த மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறார் என்பதை ஒருமுறை கூட கூறவில்லை என அவர் விமர்சித்தார்.

News May 12, 2024

Apply Now: 2,553 காலிப் பணியிடங்கள்

image

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், (Assistant Surgeon) உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான 2,553 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ₹56,100- ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

News May 12, 2024

பயிற்சி இன்றி களமிறங்கும் சென்னை அணி

image

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி இன்றி களமிறங்க உள்ளது. நேற்று முன்தினம் குஜராத்துக்கு எதிரான போட்டியை முடித்து விட்டு, CSK அணி இன்று காலை தான் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. வந்த கையோடு மைதானத்திற்கு திரும்பிய சென்னை அணி, சில மணி நேர பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு இன்றைய போட்டியை எதிர்கொள்ள உள்ளது. பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை வீழ்த்துமா CSK?

News May 12, 2024

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பாய்ந்தது

image

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர காவல்துறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது, வீட்டில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம், சென்னை மாநகர போலீசார் வழங்கியுள்ளனர்.

News May 12, 2024

CSK ரசிகர்களுக்கு வேண்டுகோள்

image

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு, அனைவரும் மைதானத்தில் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த CSK நிர்வாகம், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் உடன் தெரிவித்துள்ளது. அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

News May 12, 2024

மோடிதான் மீண்டும் பிரதமர்

image

பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மோடிதான் மீண்டும் பிரதமராவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியபோது, சிறையில் இருந்து வெளிவந்த கெஜ்ரிவால், ஊடகத்தில் செய்தி வருவதற்காக அமித் ஷா பிரதமராவார் எனக் கூறுவதாகவும், அதனால், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்றும், மோடிதான் எப்போதும் பிரதமர் என்றும் கூறியுள்ளார்.

News May 12, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்

image

CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 2ஆவது அணியாக முன்னேறும். அதே சமயம், சென்னை அணியும் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?

News May 12, 2024

பின்னணி பாடகர் வேல்முருகன் மீது போலீசில் புகார்

image

மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் – ஆற்காடு சாலையை முன்னறிவிப்பின்றி மூடி வேலை செய்வதாக, மெட்ரோ பணியாளர்களிடம் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், மெட்ரோ ஊழியரை அவதூறான வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

News May 12, 2024

பிரதமர் மோடிக்கு ஒடிஷா முதல்வர் பதிலடி

image

ஒடிஷா மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குற்றம்சாட்டியுள்ளார். ஒடிஷாவில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்கள் கூட நவீன் பட்நாயக்கின் நினைவில் இருக்காது என மோடி கிண்டல் செய்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்துள்ள நவீன் பட்நாயக், ஒடிஷா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 12, 2024

எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு

image

வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் எலுமிச்சை பழங்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ₹2,000 – ₹2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை தற்போது ₹8,000க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பழத்தின் விலை ₹6 முதல் ₹10 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் மேலும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

error: Content is protected !!