India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவிலும், ஞானவாபி மசூதி உள்ள வாரணாசியிலும் கோயில் கட்டுவோம் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 300 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதே அயோத்தியில் பாஜக அரசு ராமர் கோயிலை கட்டியதாக பெருமை தெரிவித்தார். மேலும், பாஜக அரசு இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்தும் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கௌதம் மேனனிடம் மம்மூட்டி கதை கேட்டதாகவும், அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில், மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உமாவின் புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் லாவன்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை நாய் கடித்த அதிர்ச்சி தீர்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு என்ன தீர்வு!
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், லக்னோ அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தவறவிடும் அபாயத்தில் உள்ளது. போட்டிக்கு பின் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், இந்த சீசன் முழுவதுமே பவர் பிளேவில் தாங்கள் விக்கெட்டுகளை இழந்து வருவதாகவும், சிறந்த தொடக்கம் அமையாததால் மிடில் ஆர்டரில் ஸ்டாய்னிஸ், பூரன் ஆகியோரால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் பைக்கில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் சீண்டிவிட்டு சென்றிருக்கிறார். இதில், அப்பெண் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பொது இடத்தில் தனியாக செல்லும் பெண்ணை இப்படியெல்லாம் செய்வார்களா என்று இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நபர்களை என்ன செய்வது மக்களே!
மெல்லிய இசையின் மூலம் தனி முத்திரை பதித்த சந்தோஷ் நாராயணனுக்கு 41ஆவது பிறந்தநாள் இன்று. அட்டக்கத்தி படத்தின்மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே தடம் பதித்தார். சினிமாவில் கானா பாடல்களை அதிகம் புகுத்திய அவர், ‘அவள், மாயநதி, மோகத்திரை’ மாதிரியான மனதை வருடும் பாடல்களையும் கொடுத்துள்ளார். கபாலி, கொடி மாதிரியான படங்களில் அவரின் BGM தனி ரகம். உங்களுக்கு எந்தப் பாடல் பிடிக்கும்?
கோடை வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர் இருப்பு குறைவு ஆகிய காரணங்களால் காய்கறிகளின் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாள்களாக பீன்ஸ் விலை சென்னை கோயம்பேடு மொத்த சந்தையிலேயே ₹200ஐ தொட்டுள்ளது. சில்லரை விற்பனையில் ₹220 முதல் ₹240 வரை பீன்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டல் & விடைத்தாள் நகல் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதிய மையங்கள் மூலமாக இன்று முதல் மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோருபவர்கள், அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெறும்.
நடப்பு ஆண்டு +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 137 பேர் தற்கொலைக்கு முயலலாம் என்று தமிழக அரசு கண்டறிந்துள்ளது. தொலைப்பேசி மூலம் அவர்களுடன் பேசியதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். பிள்ளைகளை மனநிலையை பெற்றோர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
Sorry, no posts matched your criteria.