India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று, சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும். தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
▶ஏப்ரல் – 25 | ▶ சித்திரை – 12 ▶கிழமை: வியாழன்| ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: 01:30 – 03:00 வரை ▶எமகண்டம்: காலை 06:30 – 07:30 வரை ▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில், தொழிலாளர் தினமான வரும் மே 1ஆம் தேதி நிகழ்ச்சிகளை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மே தின நிகழ்ச்சிகள் தொடர்பான அனுமதிகளை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்குவார்களென தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால், சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர். இது குறித்து நாசா, மேகக் கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இது போன்று ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும், மேலும் 2 நாட்களுக்கு இதுபோன்ற நிலை தொடருமெனவும் விளக்கமளித்துள்ளது.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா-துங்கர்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சியுடன் திடீரென கூட்டணி அமைத்த நிலையில், முன்னர் அறிவித்த வேட்பாளரான அரவிந்த் தாமோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால், கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாமென பிரசாரம் செய்யும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முன்னேறி அசத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தியது. இதேபோன்று, மற்றொரு அரையிறுதி சுற்றில், இந்திய பெண்கள் அணி 235 – 230 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மே.வங்கத்தில் பாஜகவை சேர்ந்த 10 முக்கியத் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைய காத்திருப்பதாக திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாதில் ரோடு ஷோவில் பங்கேற்று பேசிய அவர், கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் பாஜக தற்போது ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக, தேர்தலுக்கு பின் திரிணாமுல் கட்சி சீட்டுக்கட்டு போல சரியுமென கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் வெள்ளை டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள உயர்ந்த மலைச்சிகரங்களில் வளரும் இளம் தேயிலையை பறித்து தயாரிக்கப்படும் இந்த டீத்தூள் ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு அசாம் டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.
➤ 1792 – கில்லட்டின் கருவி மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது. ➤ 1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு தொடங்கின ➤ 1974 – போர்ச்சுகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. ➤ 2015 – நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.
மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 89 தொகுதிகளில் நாளை (ஏப்.26) நடைபெறுகிறது. இதனையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ராகுல், சசிதரூர், எச்.டி குமாரசாமி, டி.கே.சுரேஷ், தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண் கோயில் ஆகியோர் 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.