India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அமித் ஷாவுக்கு சரத் பவார் கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியில் வேளாண் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நேரிட்ட விவசாயிகள் தற்கொலைக்கு சரத்பவார் மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதைத்தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அவர் முதலில் பதிலளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
போர், டெலிவரி என அனைத்திலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதை கண்டுபிடித்தது யார் தெரியுமா? ஈராக்கில் 1937இல் பிறந்து, பிறகு இஸ்ரேலில் குடியேறிய யூதரான ஆபிரஹாம் கரேம்தான் அதனைக் கண்டுபிடித்தார். 1973இல் இஸ்ரேல்- அரேபிய நாடுகள் இடையேயான போரின் போது ட்ரோனை கண்டுபிடித்தார். பிறகு அவர் அமெரிக்காவில் குடியேறினார். இந்த கண்டுபிடிப்புக்காக, ட்ரோன் தொழில்நுட்ப தந்தை எனப் போற்றப்படுகிறார்.
RCB-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இது பெங்களூரு அணியின் 250ஆவது ஐபிஎல் போட்டி ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட, முதல் அணியாக தொடரில் இருந்து RCB அணி வெளியேறிவிடும்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம் கட்சியினர், ஒடிசாவின் பாரம்பரியமான சம்பல்புரி லுங்கி கைத்தறி நெசவையும், கலாசாரத்தையும் பாஜக அவமதித்து விட்டதாக பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
ஏசி பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியெனில் கீழ்காணும் வழிகளை கடைபிடித்தால், மின்சாரக் கட்டணத்தை சேமிக்கலாம். 1) ஏர் பில்டர்களை 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றவும் 2) ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் (அ) ஏசி கன்ட்ரோலர் பயன்படுத்தவும் 3) அறையின் ஜன்னல், கதவை மூடிவிடவும் 4) சரியான டெம்ப்ரேச்சரை செட் செய்யவும் 5) அறையின் அளவுக்கேற்ற ஏசி வாங்கவும் 6) இரவில் ஸ்லீப்பிங் மோடில் பயன்படுத்தவும்
முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய <
CSK-SRH இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு, CSK மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளங்களில் தொடங்க உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமுமின்றி, ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,000, ₹6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள CSK அணி, சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது ஒரு படத்தில் நடிக்க ₹104 கோடி வரை ஊதியம் வாங்குகிறார். அவர் நடித்த முதல் படம், அமராவதி என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால், சுரேஷ், நதியா நடிப்பில் வெளியான என் வீடு என் கணவர் திரைப்படமே அவர் நடித்த முதல் படமாகும். அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு ₹2,500 ஊதியமாக வழங்கப்பட்டது.
வரும் மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ₹200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதலான நிலையில் ₹4 கோடி குறித்து மட்டும் விசாரிக்கின்றனர். அந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிடிபட்ட 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். அவர்களை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் ஆண்டுதோறும் 10 ரஞ்சி போட்டிகளில் விளையாடினால், ரூ.1 கோடி வரை சம்பளம் உயர்த்தப்படும். இது உள்நாட்டு கிரிக்கெட் மீதான முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடாதது சர்ச்சையானது.
Sorry, no posts matched your criteria.