India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கய் விட்டல், சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தார். ஹூமானியில் நடத்தி வரும் வனவிலங்குக் காப்பகத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியது. இதையடுத்து, காயத்துடன் மீட்கப்பட்டு ஹராரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 2013இல் அவர் தூங்கியபோது 8 அடி முதலை அருகே படுத்திருந்தது. ஆனால் அது ஒன்றும் செய்யாததால் தப்பினார்.
நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டின் 4 ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 27% அதிகரித்து ரூ.934.17 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.736.64 கோடியாக இருந்தது. வருவாயைப் பொறுத்தமட்டில், 8.84% உயர்ந்து ரூ.5,294.34 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் வருவாய் ரூ.4,864.22 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ரூ.8.50 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ராஜஸ்தான் அருகே விழுந்து நொறுங்கியது. ஆளில்லா விமானங்கள் மூலம் எல்லைப் பாதுகாப்பு, கண்காணிப்புகளை விமானப் படை மேற்கொள்கிறது. அந்த வகையில் ஜெய்சால்மர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு சென்ற விமானப் படை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஓவைசியின் வகுப்புவாத அரசியலை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் மூலமாகப் பரப்புரை செய்யும் வேலையை ராகுல் செய்கிறார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். ஹைதராபாத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி ஓவைசியின் B அணியா அல்லது ஓவைசி ராகுலின் B அணியா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மாட்டிறைச்சி தின்போருக்கு இவிஎம்மின் ‘பீப்’ ஒலி பதிலளிக்கும் எனத் தெரிவித்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருப்பதி, தாய்லாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் எனத் தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இதன்படி பிஹார், கர்நாடகா, ஒடிசா மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான செரிலாக்கில் அதிகச் சர்க்கரை சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக விசாரிக்க FSSAI-க்குக் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் செரிலாக் மாதிரிகளை FSSAI சோதிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 15 – 20 நாள்களில் ஆய்வுகள் முடிந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் ₹3.20 கோடி மதிப்புடைய பழைய ₹2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் ₹3.20 கோடி அளவிற்கு பழைய ₹2000 நோட்டுகள் இருந்துள்ளது. ஆறு தவணையாக இதை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ள தேவஸ்தானம், தேவஸ்தான லாக்கரில் ₹49.70 கோடி அளவிற்கு பழைய ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
*நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்.
*வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
*லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
*தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகளின் விலை 30% வரை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்ற காஞ்சி பட்டு சேலைகள், ஆண்டுதோறும் ₹300 கோடி அளவுக்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்வால், ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட பட்டு சேலைகளின் விலை ₹10,000லிருந்து ₹15,000ஆக உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து ரக பட்டு சேலைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.