India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தானின் கராச்சியில் காவலரின் மகனான டேனியல் என்பவர் தனது காதலி, அவரது நண்பரும் நீதிபதியின் மகனுமான அலி கீரியோ மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, டேனியல் தனக்கும், காதலிக்கும் சேர்த்து 2 பர்கரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அலி கீரியோ அதை எடுத்துச் சாப்பிட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில், டேனியல் துப்பாக்கியால் சுட்டதில் அலி கீரியோ படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்.26, 27இல் நாகை, வேளாங்கண்ணி, ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 13 வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க சென்னையில் ₹500, பிற மாவட்ட தலைநகரங்களுக்கு ₹200 பயிற்சிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 18 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய மனைவிகளின் தாலி குறித்துக் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியினர், அயோத்தியில் சமாஜ்வாதியினரால் உயிரிழந்த ராம பக்தர்களுடைய மனைவிகளின் தாலிக்குப் பதில் சொல்ல வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாலி பற்றிப் பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும் என அகிலேஷ் யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் பேசியிருந்தார்.
பிஹாரின் பாகல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜித் ஷர்மாவுக்கு ஆதரவாக அவரது மகளும், நடிகையுமான நேஹா ஷர்மா தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ரோடு ஷோ நடத்திய அவருக்கு வழி நெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நேஹா ஷர்மா, அன்புக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
சேமிப்பில் ஒழுக்கத்தைக் கொண்டு வர ’முதல் வார விதி’ அவசியமானது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். சம்பளம் வந்ததும் தேவைகள், விருப்பங்கள் போக மீதியை சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த முறையிலான சேமிப்பு பலன் கொடுக்காது எனக் கூறப்படுகிறது. மாறாக சம்பளம் வந்த முதல் வாரத்திற்குள் 20% பணத்தை சேமிப்பதே சிறந்தது.
மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனையைத் தடுக்கத் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளை அமல்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறித் தண்டனை வழங்கினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஐகோர்ட், விதிகள் அமலாவதைக் கண்காணிக்க ஆசிரியர், பெற்றோர், மூத்த மாணவர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.
கடலில் மூழ்கிப் பிரார்த்தனை செய்ததை காங்கிரசார் கேலி செய்வதாகப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், தான் மிகுந்த பக்தியுடன் கிருஷ்ணரைப் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார். காங்கிரசார் கேலி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், யது குலத்தோர் என அழைத்துக் கொள்ளும் சமாஜ்வாதியினரும் அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது வியப்பாக உள்ளது என்றார்.
மக்களவைத் தேர்தலுக்கு ஆகும் மொத்தச் செலவு ₹1.35 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சி செய்யும் செலவும் தேர்தல் செலவுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதன்படி “The Centre for Media Studies” என்ற நிறுவனம் தேர்தல் செலவு குறித்து நடத்திய ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. 2019இல் தேர்தல் செலவு ₹66 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 2 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
நீட் தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. MBBS, BDS போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுதும் மையம் தொடர்பான விவரங்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவிட்டு விவரங்களை அறியலாம்.
Sorry, no posts matched your criteria.