India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தர பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளது. முன்னதாக, 8 வாக்குகள் பதிவு செய்த அச்சிறுவன், பாஜக பிரமுகர் அனில் சிங் தாக்கூரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு செல்ல முடியும். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான சந்தோஷ், காவலர் ஒருவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பதாகக் கூறி அவரின் பைக்கை எடுத்துக் கொண்டு நேராக முதல்வர் வீட்டிற்கு சென்றுள்ளார். பைக்கில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால், அங்கிருந்த இருந்த காவலர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. பின்பு அவர் மீது மதுவாடை வந்ததால், போலீசார் கைது செய்தனர்.
அதி கனமழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வானிலை மையம் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 20 செ.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என்பதால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தையும் ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனல் ஒளிபரப்புவதாகவும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் தனிமையே இல்லாமல் போய்விட்டதாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ”SHAME ON STAR SPORTS” என்று X தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரோஹித் சொன்னது குறித்த உங்களது கருத்து என்ன?
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் சந்தோஷ் என்பதும், மதுபோதைக்கு தான் அடிமையாகி விட்டதால், என்னை போன்று வேறு யாரும் குடிக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகள் மூட முதல்வரிடம் நேரில் வலியுறுத்த வந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முற்பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருப்பது அவசியம். அதிலும் காலை நேரத்தை புத்துணர்ச்சியோடு தொடங்கினால், நாள் முழுவதும் சிறப்பானதாக அமையும். அந்த வகையில், அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சீக்கிரம் எழுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல அவசரமாகப் புறப்பட வேண்டிய தேவை ஏற்படாது. முடிந்த வரையில் எளிமையான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல், 2026இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், தற்போதே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், MLAக்கள் மாவட்டச் செயலாளர்களாக இருக்கின்றனர். இதனால், உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மே20) நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25% சீட் ஒதுக்கப்படும் (85,000-க்கும் அதிகமான இடங்கள்). எனவே, விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் <
சென்னையில், வீட்டின் கூரை மீது தவறி விழுந்த குழந்தையின் தாயார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். குழந்தையை சரியாகக் கவனிக்கவில்லை என்ற விமர்சனம் தாங்காமல் மனமுடைந்து அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெரியாமல் நடைபெற்ற தவறுக்கு இப்படி ஒருவரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி சாகத் தூண்டுவது சரியா? புறணி பேசுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.