India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோடி மீண்டும் பிரதமரானால் விவசாயிகளை பழிவாங்குவார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டத்தால் 2021இல் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததென்றும், மோடி மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார். மோடி, கருநிற கோப்ரா போன்றவர், மீண்டும் பிரதமரானால், விவசாயிகளை பழிவாங்காமல் விட மாட்டார் என்றும் அவர் எச்சரித்தார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால், வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர்போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல அவரின் மா.செ பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதேபோல், கொங்கு, தென் மாவட்ட அமைச்சர்கள் பெயர்களும் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் இருப்பதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 15 முறையும், மும்பை அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தென்மாநிலங்களில் 42 முக்கிய அணைகளின் நீர்மட்டம் பெரும் சரிவடைந்துள்ளது. மத்திய நீர்வள ஆணைய புள்ளி விவரங்களில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் உள்ள 42 அணைகளில் 2023ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 53.3 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் இருந்ததாகவும், தற்போது 8.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை குறைவாக பெய்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தேனி வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரியம்மன் கோயில். மதுரையை முன்பு ஆண்ட வீரபாண்டியனுக்கு பார்வை பறிபோன நேரத்தில், தற்போது கோயில் உள்ள இடத்தில் எழுந்தருளிய கெளமாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி, பார்வை பெற்றார் என்பது வரலாறு. இதனால் அங்கு அவர் கோயில் கட்டினார். எனவே அவரது பெயரால் அந்த ஊர், வீரபாண்டி என அழைக்கப்படுகிறது. இங்கு வழிபட்டால், கண் நோய் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை 18.4 ஓவரிலேயே எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன், 2020இல் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக 224 ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்றது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்.15ஆம் தேதி மும்பையில் சல்மான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு இருவர் தப்பியோடினர். இது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிஷ்னோய் சகோதர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
உக்ரைனுக்கு 6 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்நிலையில், NASAMS எனப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பு, ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதற்காக, அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கூடுதலாக ஆயுதங்களை அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லீம் லீக்கின் நிகழ்ச்சி நிரல் போன்று, சிறுபான்மையினருக்கு தனியாக சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரின் பெமேதராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வுக்கு வர மறுத்த காங்கிரஸ் கட்சிக்கு, நாட்டை ஆள்வதற்கு எந்த உரிமையும் இல்லையெனவும் விமர்சித்துள்ளார்.
▶ஏப்ரல் – 27 | ▶ சித்திரை – 14 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: சதுர்த்தி ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:00 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 09:30 – 10:30 வரை ▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை ▶சந்திராஷ்டமம்: அசுபதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
Sorry, no posts matched your criteria.