India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மனைவியின் சொல் பேச்சை கேட்கும் கணவர்களை ‘பொண்டாட்டி தாசன்’ என்று பலரும் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான், வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி பெறுவதாக Harvard Business School நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர்களின் சிக்கல்களை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து கொடுப்பதும் மனைவிகள் தானாம்.
✪டி.ஆர்.பாலுவின் மனைவி <<17450853>>ரேணுகாதேவி <<>>காலமானார்
✪ஆம்புலன்ஸ் <<17451121>>விவகாரம்<<>>.. EPS-ஐ எச்சரித்த அமைச்சர்
✪ரத்தாகும் <<17448881>>ஜான் <<>>பாண்டியனின் கட்சி அங்கிகாரம்
✪ஜெலென்ஸ்கி- <<17448708>>புடின் <<>>சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் டிரம்ப்
✪<<17450745>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹1,680 குறைவு ✪ஆசிய கோப்பைக்கான <<17449797>>இந்திய <<>>அணி.. இன்று அறிவிப்பு
ஆம்புலன்ஸ் விவகாரத்தில் <<17450249>>EPS<<>> இத்துடன் நிறுத்துக் கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். ஆம்புலன்ஸ் பயணிக்கும் பிரதான சாலைகளில் EPS பிரச்சாரம் செய்வதாகவும், ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவது அவரது தரத்தை குறைத்துவிடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, இனி தன்னுடைய பிரச்சாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவர் பேஷண்ட் ஆவார் என EPS எச்சரித்து இருந்தார்.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹1,680 வரை குறைந்து இன்று ₹73,880க்கு விற்பனையாகிறது. 10 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலையும் இன்று ₹1000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் வேணி (71) மாரடைப்பால் காலமானார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள இவர், கணவர் இறந்த பின்பு, அவரது ₹5 சேவையை தொடர்ந்து வந்தார். அவருடைய இழப்பை கேட்டு சென்னை மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக, இவரது கணவர் டாக்டர் ஜெயச்சந்திரன் 48 ஆண்டுகளாக ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2018-ல் காலமானார்.
1. பிறந்த குழந்தைக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
2. இந்தியாவின் முதல் ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
3. ஆபரேஷன் Blue Star எந்த ஆண்டு நடந்தது?
4. இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் யார்?
5. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
மதுரையில் ஆக., 21-ல் நடக்கவுள்ள தவெகவின் 2-வது மாநாடு மழையால் தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அதீத வெப்பம் நிலவும் எனவும், மாலையிலும், இரவிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதனால், மாநாட்டிற்கு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.