India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகளிர் ODI உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறும் போது, கோலி ரசிகர்களை நோக்கி, பேட்டை லேசாக உயர்த்தி சைகை காட்டிவிட்டு சென்றார். ஆஸி., தொடர் தான் அவரின் ODI எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்த நிலையில், ஓய்வைதான் கோலி சூசகமாக அறிவித்துவிட்டார் என கமெண்ட்ஸ் பறக்கிறது. X தளத்திலும் ‘Retirement’ டிரெண்டடித்து வருகிறது. இந்த வீழ்ச்சியில் இருந்து மீள்வாரா கோலி?

ஒரு ரூபாய் பிரீமியம் கூட செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். ஊழியர் ஒருவர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இத்தொகையை பெறலாம். SHARE THIS.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி(70) காலமானார். மூச்சு திணறல் பிரச்னைக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்னும் 20 வருஷம் தான். நாம் எல்லாரும் விண்வெளியில் வீடு கட்டிவிடுவோம் என்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். 2045-க்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என்று கணிக்கும் பெசோஸ், நிலவு மற்றும் பிற கோள்களில் ரோபோக்கள் வேலை செய்வார்கள் என்றும் கூறுகிறார். AI வேலைகளை பறிக்காது என்றும், அது சமூகத்திற்கு அதிக செழிப்பையே கொடுக்கும் எனவும் ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸி.,க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264/9 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ரோஹித் 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்களும், அக்சர் படேல் 44 ரன்களும் அடித்து அவுட்டாகினர். ஆஸி., அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களையும், பார்ட்லெட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த ஸ்கோரை Defend செய்து வெற்றி பெறுமா இந்தியா?

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ்(68) உடல்நலக்குறைவால் காலமானார். தேவாவின் சகோதரர்கள் சபேஷ் – முரளி இருவரும் இணைந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். சபேஷ் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

அறிவியலின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகிலேயே அதிவேகமாக இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு வேகத்தில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் Algorithm-ஐ உருவாக்கி கூகுள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ‘Quantum Echoes’ என்ற இந்த Algorithm புதிய மருந்து கண்டுபிடிப்பு, Material Science துறைகளில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிஹார் சட்டமன்ற தேர்தலில், INDIA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். INDIA கூட்டணியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வேட்பாளரை காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். NDA சார்பில் CM வேட்பாளராக யாரும் களமிறக்கப்படவில்லை. இம்மாநிலத்துக்கான தேர்தல் நவ.6, 11-ல் நடக்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.