India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் 70 கோடி மக்கள் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதாகக் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் கஷ்டம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதை செய்ய முடியாதவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன், வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் பசி எண்ணம் குறைவதுடன், உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியையும் அது கொடுக்கிறது. மேலும், உடற்பயிற்சிக்கு முன், பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலபோர்ட் கடந்த 6ஆம் தேதி பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு நிபந்தனையுடன் ரூ.92.1 கோடி தர விப்ரோ முன் வந்துள்ளது. நிபந்தனையின்படி, அவர் அடுத்த ஓராண்டுக்கு வேறு எந்த வேலையிலும் சேரக் கூடாது. அதேபோல, ஆலோசனைப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது. போட்டி நிறுவனத்தில் சேராமல் இருப்பதற்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் தொகுதியில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நேற்று (ஏப்.26) நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவின்போது, சாம்ராஜ் நகர் தொகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு சின்ன வெங்காயத்தைப் பச்சையாகத் தின்ற பின் தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம். *வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார பெற்றுள்ளது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RR அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் (71*), துருவ் ஜுரெல் (52*) ஆகியோர் அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இது, நடப்பு ஐபிஎல் தொடரில் RR அணிக்கு கிடைக்கும் 8ஆவது வெற்றியாகும்.
பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட 2.6 மடங்கு பெரிதான K2-18b கடல்கள் சூழ அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த பாஜக விரும்புவதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். மோடி எதை மறுக்கிறாரோ அதை அதிகாரத்திற்கு வந்த பிறகு அமல்படுத்துவார் என்ற அவர், பாஜக அரசியலமைப்பை மாற்றி மக்களுக்கான உரிமைகளைப் பறிக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நவக்கிரகங்களில் மங்கள நாயகனான சுக்கிர பகவானின் பெயர்ச்சி அனைத்து ராசியினருக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். தற்போது மேஷ ராசிக்கு அவர் இடம்பெயர்ந்துள்ளதால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறது. பொன், பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை போன்ற யோகங்கள் தேடி வரும். நீண்ட நாள் காரியம் கைகூடும், திருமணம், புதிய வேலை என பல்வேறு சுப பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள்.
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி ‘ராமாயணா’ திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி சீதா வேடத்திலும், ரன்பீர் கபூர் ராமன் வேடத்திலும் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.