News May 23, 2024

கொல்கத்தா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மம்தா எதிர்ப்பு

image

ஓபிசி சான்றிதழ் தொடர்பான கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த மம்தா, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதேநேரத்தில் ஓபிசி இடஒதுக்கீடு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

News May 23, 2024

தோல்விக்கு பிறகு உருக்கமாகப் பேசிய தினேஷ் கார்த்திக்

image

RR-க்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக், தோல்வி குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “தொடர்ந்து 6 போட்டிகளில் வென்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அதனால், இந்த வருடம் எங்களுக்கானது என்று நினைத்தோம். ஆனால், விளையாட்டைப் பொறுத்தவரை எல்லா போட்டிகளிலும் சரியான முடிவுகளை பெற முடியாது. சில கடினமான நாள்கள் இருக்கும். இது எங்களுக்கு கடினமான நாளாகிவிட்டது” எனக் கூறினார்.

News May 23, 2024

மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

image

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குஜராத்தில் தாக்குதல் நடத்தவும், பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், கொலை மிரட்டல் வந்துள்ளது.

News May 23, 2024

6 போட்டிகளில் தொடர்ந்து வென்றது பெருமை

image

RR-க்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வென்றிருக்கலாம் என RCB கேப்டன் டு பிளசி கூறியுள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், தங்கள் வீரர்கள் உண்மையிலேயே கடினமாகப் போராடியதாகவும், பனி மற்றும் இம்பேக்ட் வீரர் விதி இருப்பதால் எதிரணிக்கு இந்த ஸ்கோர் போதாது என்றும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றது மிகவும் பெருமையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

News May 23, 2024

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

image

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மோடிக்கு இந்தியில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். அந்த அழைப்பு மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேசத்துக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

News May 23, 2024

இந்திய ஹாக்கி அணி த்ரில் வெற்றி

image

பெல்ஜியத்தில் நடைபெற்ற FIH ப்ரோ லீக் போட்டியில், இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இப்போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. லலித் மந்தீப் தலா 1 கோல் அடித்தனர். ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. அதில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

News May 23, 2024

கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

image

லியோ, டாடா உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன், நடிகர் கவினை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், கவினுக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்திற்கு பிறகு, இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

News May 23, 2024

குறைந்தது 300 தொகுதிகளில் வெற்றி

image

மத்தியில் இருந்து சர்வாதிகார அரசை அகற்றுவதே தங்களின் குறிக்கோள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். INDIA கூட்டணி குறைந்தபட்சம் 300 தொகுதிகளில் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பாஜகவினர் எதேச்சதிகாரத்தை விரும்புவதாகவும், ஜனநாயகத்தை விரும்பவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே பாஜகவினர் 400 எம்பிக்கள் தேவை என கூறுவதாகவும் சாடினார்.

News May 23, 2024

இம்மாத இறுதிக்குள் 100% ரேஷன் பொருள்கள் விநியோகம்

image

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ரேஷன் பொருள்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பரப்பு, பாமாயில் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் 100% விநியோகிக்கப்படும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.

News May 23, 2024

தாக்கத்தை ஏற்படுத்தாத மேக்ஸ்வெல்

image

நடப்பு ஐபிஎல் தொடரில், RCB வீரர் மேக்ஸ்வெல் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 52 ரன்கள், 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். லீக் போட்டிகளில் சரியாக விளையாடாத அவர், பிளே-ஆப் போட்டியில் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால், அடுத்த சீசனில் RCB அணியில் தொடருவது சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

error: Content is protected !!