India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு விமர்சித்துள்ளார். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தரமான வீரர்கள் என்றாலும், அவர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க யாருமே தயாராக இல்லை எனக் கூறினார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் பாராட்டிய நிலையில், இவர் விமர்சித்துள்ளார்.
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளாவின் முடிவை ஏற்க முடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். தடுப்பணை குறித்தத் தகவல்களை தமிழக அரசிடம் கேரளா முன்பே கொடுத்திருக்க
வேண்டும் என்று கூறிய அவர், பிரச்னை பேசி தீர்க்கப்படும் வரை அணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தடுப்பணை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என ஏற்கெனவே தமிழக முதல்வர், கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குப்பதிவு தொடர்பான படிவம் 17சி இல் உள்ள தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், சாவடிகள் வாரியாகப் பதிவான வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது அதுதொடர்பான இடைக்கால உத்தரவை தங்களால் பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் செயல்பாடுகளில் நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். 2ஆம் எண் கூண்டு, யல் உருவானதைக் குறிக்கும். இந்த எச்சரிக்கையைக் கண்டால் கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். 3ஆம் எண் கூண்டு, திடீர் காற்றோடு மழை பொழியும், வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என பொருள்.
தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் ₹340க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு ₹400ஆக அதிகரித்துள்ளது. இஞ்சி ₹220, பீன்ஸ் ₹215, பீட்ரூட் ₹80, பெரிய வெங்காயம் ₹45, கத்திரிக்காய் ₹80, முட்டைகோஸ் ₹50 கேரட் ₹90 முருங்கைக்காய் ₹80, உருளைக்கிழங்கு ₹85, தக்காளி ₹50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆப்பிள் ₹260, திராட்சை ₹120, மாம்பழம் ₹200, மாதுளை ₹250, கொய்யா பழம் ₹100க்கும் விற்பனையாகிறது.
கார்த்திக் நடிக்கும் 27ஆவது படத்தின் அப்டேட்டுகள் இன்று மாலை 5 மற்றும் 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பிரேம் குமார் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர். படத்தின் பெயர் ‘மெய்யழகன்’ என்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் உத்திகளால் ஒடிஷா பாஜ தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு கூட வர முடியாத சூழல் உள்ளதாக வி.கே.பாண்டியன் தெரிவித்தார். இதனால் அவர்களை ஆதரித்து பேச தேசியத் தலைவர்கள் இங்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், ஓட்டுகளைப் பெற முதல்வரை இழிவுபடுத்தும் நிலைக்கு பாஜக தரம் தாழ்ந்திருப்பது வருத்தமளிப்பதாகக் கூறினார். ஒடிஷா மக்கள் இவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்றார்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை ₹1000 வழங்கும் திட்டத்தால், கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் மக்கள் தவித்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம்-திண்டுக்கல் விரைவு ரயில் ஆகியவை வடமதுரையில் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் ரயில் குட்டலத்திலும், மதுரை- திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரிதா விரைவு ரயில் இடபள்ளியிலும், நெல்லை – பாலக்காடு பாலருவி ரயில் எழுகோன், அவுனேஸ்வரத்திலும், மதுரை-புனலூர் ரயில் இரவிபுரத்திலும் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.