News May 24, 2024

G.O.A.T படத்தின் BTS புகைப்படம் வைரல்

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் ‘G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, VFX, டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

News May 24, 2024

அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்: கெஜ்ரிவால்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தன்னிடம் ஆதாரம் இல்லை என பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த வழக்கில் சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியாவுடன் தன்னையும் கைது செய்து 500க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தியிருந்தாலும், ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை என்றார். இதன் மூலம் இது பொய் வழக்கு என்பது நிரூபணமாகியுள்ளதால், அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News May 24, 2024

குல்லா அணிவித்தால் ஆளுநர் ஏற்பாரா?: அப்பாவு

image

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் இடம்பெற்ற திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆளுநரை இஸ்லாமியராக சித்தரித்து குல்லாவும், அவரது மனைவிக்கு பர்தாவும் அணிவித்தால் ஆளுநர் ஏற்றுக் கொள்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ள சபாநாயகர் அப்பாவு, ஒருவேளை அதை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

சூறைக் காற்றுடன் கொட்டும் கனமழை

image

தமிழகத்தில் தற்போது நெல்லை, தென்காசி, குமரி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 24, 2024

IPL: ஹைதராபாத் அணி பேட்டிங்

image

சென்னையில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News May 24, 2024

AI குறித்து எலான் மஸ்க் அச்சம்

image

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாரிஸில் நடந்த விவா டெக் 2024 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற அவர், AI காரணமாக வருங்காலத்தில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என எச்சரித்தார். கணினிகள் மற்றும் ரோபோக்களால் மனிதர்களை விட எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிந்தால் நமது வாழ்க்கைக்கான அர்த்தம் இருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

News May 24, 2024

மீம்ஸ் மூலம் பிரபலமான கபோசு நாய் உயிரிழந்தது

image

மீம்ஸ் மூலம் பிரபலமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘கபோசு’ என்ற நாய் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் உருக்கமாக தெரிவித்துள்ளார். மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இந்த நாய்க்கு, கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கிரிப்டோ கரன்சியின் லோகோவாக இந்த நாயின் புகைப்படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

image

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழுவின் அறிவிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ள அவர், புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் முன்மொழிவு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

News May 24, 2024

மூன்று மாதங்களில் வழக்கை முடித்து வைக்க உத்தரவு

image

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்றும் CBI தெரிவித்துள்ளது.

News May 24, 2024

சென்செக்ஸில் இடம்பெறும் அதானி போர்ட்

image

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸில் இருந்து விப்ரோ நிறுவனத்தை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாப் 30 நிறுவனங்களை கொண்ட சென்செக்ஸ் பட்டியலில் ஜூன் 24ஆம் தேதி விப்ரோ வெளியேற்றப்பட்டு, அதற்கு பதிலாக அதானி போர்ட் நிறுவனம் சேர்க்கப்படவுள்ளது. இதன் மூலம் சென்செக்ஸில் அதானி குழுமத்தின் நிறுவனம் முதல்முறையாக இடம்பெறுகிறது. நிஃப்டியில் 2 அதானி குழும நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!