India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேச உணர்வூட்டும் வந்தே மாதரம் பாடலை இன்று காலை 9.50 மணி அளவில் பொதுமக்கள் பாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. இன்று, அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை PM மோடி வெளியிடுகிறார்.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல வித உடல்நல பிரச்னைகளுக்கு இது சுவையான தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி பக்கம் உள்ள கும்பலில் 21 பேர் இருப்பதால், அதை பயன்படுத்தி அவர் புதிய கட்சி தொடங்கி கொள்ளட்டும் என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். அக்கட்சிக்கு பொருத்தமான பெயரை தானே சொல்வதாகவும், ஆனால் அன்புமணிக்கு பாமகவுடனும், தன்னுடனும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், ராமதாஸ் கூறியுள்ளார்.

கரூர் துயருக்கு பிறகு BJP மீது விஜய் சாஃப்ட் கார்னர் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பரப்புரைகளில் பாசிசம் என BJP-ஐ விமர்சித்து வந்த விஜய், தற்போது பொதுக்குழுவில் அதே மாதிரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்கின்றனர். SIR-க்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட EC-ஐ மட்டுமே சாடியுள்ளதால் ADMK-BJP கூட்டணிக்கு விஜய் அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு சதுர அடி அளவு ஒப்பீட்டில், 2024-ம் ஆண்டுக்கான ஜூலை-செப்டம்படர் (Q3) சராசரி விலையை விட, நடப்பாண்டு ஜூலை-செப்டம்பர் (Q3) விலை குறைந்தபட்சம் 7% அதிகரித்துள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

தெலுங்கு வரவான மானஸா செளத்ரி, ‘ஆர்யன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தடம் பதித்துள்ளார். பயண ஆர்வலரான இவர், சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் கேஷுவலாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மானசா SM-ல் பதிவிட்டுள்ள நிலையில், அவரது புன்முறுவலுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆகியுள்ளனர். கனவு கன்னியாக மாறப் போகும் மானஸாவின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க

பிஹார் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் வலுவாக தெரிவதாகவும், அது பிஹாரின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியம் என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 60% மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது NDA-வுக்கு சாதகமான மனநிலையை காட்டுவதாக விஷால் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று கூறியுள்ளார்.

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ₹20 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்தும் வகையில் விதிகள் வகுப்பது ஏற்புடையதல்ல என்று அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக வணிக அரசியல் செய்வதாகவும், அதை போன்ற கட்சிகள் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி யோசனை கூறுவதாக அவர் சாடியுள்ளார். சேதத்திற்கு அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதால், வைப்புத்தொகை முன்மொழிவை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.