India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், சுகாதாரத்துறை களப் பணியாளர்கள் நாள்தோறும் பகல் 11 மணிக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அதிக வெயிலில் மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ORS கரைசலை வைத்திருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ்களில் ஐஸ் பேக்குகள் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்யாமல் வசூல் செய்யும் வேலைகளில் ஈடுபடுவதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் காங்கிரஸ் கஜானாவைக் காலி செய்துவிட்டதாகக் கூறிய அவர், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போகும் நாள் மிக விரைவில் வரும் என்றார். கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7இல் தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படாதது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக எம்.பி இளங்கோ அளித்த மனுவில், வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி ட்ரோன் கேமராக்களை இயக்க அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 173 சிசிடிவி கேமராக்களும், ஈரோட்டில் ஒரு சிசிடிவி கேமராவும் திடீர் கோளாறால் பழுதானது. பின்னர் உடனடியாகச் சரி செய்யப்பட்டது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 77 சராசரி, 161 ஸ்டிரைக் ரேட்டுடன் 385 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதமும் அடங்கும். மேலும், இந்திய அணியின் முதல் 4 இடங்களில் விளையாட ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார் ஆகியோர் தேர்வாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோடை வெயிலைத் தணிக்க முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா கோடநாடு சென்றபோது கருணாநிதி ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார். “கும்பி எரியுது, குடல் கருகுது: கோடநாடு ஒரு கேடா?” என்ற அந்த அறிக்கையைத் தற்போது அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். “கும்பி எரியுது, குடல் கருகுது: கொடைக்கானல் ஒரு கேடா?” என்று அதிமுகவினர் ட்ரெண்ட் செய்கின்றனர்.
தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்குச் சமமாகும். அதனால், வீடுகளில் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்திலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான தினப்பிரதோஷத்திலும் விளக்கேற்றுவது மிகுந்து புண்ணியத்தைத் தரும். இந்த நேரத்தில் விளக்கேற்றுவதால், அனைத்து தடைகளும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குறிப்பாக, 5 முக விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
நடிகர் சங்கக் கட்டடப் பணிகளுக்காகப் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. முகநூலில் இது தொடர்பாக வெளியான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிதி நெருக்கடியால் தடைபட்டிருந்த நடிகர் சங்கக் கட்டடப்
பணி சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. நடிகர்கள் விஜய், கமல், உதயநிதி தலா ரூ.1 கோடி வழங்கினர்.
குழந்தை பிறப்பை தடுக்க இஸ்லாமியர்கள் காண்டம் போன்ற கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். அதிக குழந்தை பெறுபவர்கள் என மோடி கூறியதற்கு பதிலளித்த அவர், இந்து சகோதர, சகோதரிகள் மத்தியில் பிரதமர் மோடி அச்சத்தை விதைக்கிறார். தரவுகளின்படி, இஸ்லாமியர்களின் மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ளது. இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை” எனத் தெரிவித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தனது இலட்சியம் எனத் தமிழகப் பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்தார். அவர் ஒலிம்பிக்குக்குச் செல்வது இரண்டாவது முறையாகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்றார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க, மதச்சார்பற்ற ஜனதா தளம் MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்களுடன் பிரிஜ்வல் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, ரேவண்ணா மீதும் அவரது வீட்டில் சமையல் வேலை பார்த்த பெண், பாலியல் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.