India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம்சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தொலைதூர கிராமத்தில் மருத்துவ சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், விருதை திருப்பி தர வேண்டுமென மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், விருதைத் திருப்பித் தருவதாகவும், மருத்துவப் பயிற்சியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.
சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவில் இணையப்போவதாக சிலர் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். இந்நிலையில், “என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் தவறான, பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஆனாலும், போரை தொடரப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக #AllEyesOnRafah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வரும் சூழலில், நடிகைகள் சமந்தா, ராதிகா ஆப்தே, எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா-2024இல் விருது வென்ற பாயல் கபாடியா, அனசுயா செங்குப்தா ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரது சாதனையும் இந்திய சினிமாவின் தாழ்வாரங்களுக்குள் ஆழமாக எதிரொலிப்பதாக புகழ்ந்துள்ளார். ஷேம்லஸ் படத்திற்காக நடிகை அனசுயா செங்குப்தா, ALL WE IMAGINE AS LIGHT படத்திற்காக பாயல் கபாடியாவுக்கு விருது வழங்கப்பட்டது.
பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையில், சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிக்க தாய்லாந்து அரசு முயன்று வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் முதல் 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 60 நாள்கள் வரை தங்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, 57 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 30 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 4 கோடி பயணிகள் இந்த ஆண்டு தாய்லாந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தொடங்கி பாஜக வரை அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறிமாறி கட்சித் தாவினர். தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இபிஎஸ் தலைமையை ஏற்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.
உயிரணு சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் அவதி அடைந்து வரும் நிலையில், சீனாவில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய நபர் உயிரணு மாற்று சிகிச்சைக்கு பிறகு 33 மாதங்களாக இன்சுலின் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார். சீனாவில் 4 கோடி பேர் இன்சுலின் ஊசியைச் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான IRCTC கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 2% உயர்ந்து, ₹284 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயைப் பொறுத்தமட்டில், 19% அதிகரித்து, ₹1,155 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ₹965 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ₹4 ஈவுத்தொகை (Divident) வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
டெல்லி அமைச்சர் அதிஷி கைது செய்யப்படலாம் என வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த அதிஷி, தங்கள் கட்சி MLA-க்களை ₹25 கோடி கொடுத்து வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், பாஜகவுக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி பிரவீன் ஷங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நாளை அதிஷி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பணம் இல்லாத போதுதான் அதன் மதிப்பு தெரியும் என ரிங்கு சிங் கூறியுள்ளார். IPL தொடருக்கான KKR அணியில் ரிங்கு ₹55 லட்சம், ஆஸி., வீரர் மிட்செல் ஸ்டார்க் ₹24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ₹55 லட்சமே தனக்கு மிகப்பெரிய பணம் என்றார். மேலும், ஒரு காலத்தில் ₹10-₹15 கிடைத்தாலே அது எனக்கு பெரிய விஷயம் தான் எனவும், தனது பழைய நியாபகங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
Sorry, no posts matched your criteria.