News May 29, 2024

மகாகாலேஸ்வரர் கோயிலில் ராசி கண்ணா சாமி தரிசனம்

image

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையான ராசி கண்ணா பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிகை வாணி கபூருடன் இணைந்து மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனத்திற்குப் பின் அவர் கூறுகையில், தரிசனத்திற்குப் பின் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தோம். மகாகாலேஸ்வரர் எங்களை மீண்டும் அழைப்பார் என நம்புகிறோம் என்றார்.

News May 29, 2024

பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

image

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை குமரிக்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் போலீசாரும், கடல் பகுதிகளில் கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மே 30,31 மற்றும் ஜூன் 1 ஆகிய நாள்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்

image

கடந்த சில தினங்களாக பாஜகவைச் சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் எனக் கூறி வருகின்றனர். மேலும், ஜெயலலிதா கரசேவைக்கு ஆள்களை அனுப்பினார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை கூறுவது பொய்யான கருத்து. அவர் கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் எனக் கூறியுள்ளார்.

News May 29, 2024

புத்தரின் பொன்மொழிகள்

image

☛ பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான்.
☛ வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
☛ மனநிம்மதிக்கு இரு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது.
☛ அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.
☛ உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.

News May 29, 2024

இந்தியா மோதப்போகும் அணிகள் இவைதான்

image

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 2இல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறுகிறது. அதில் இந்தியா, அயர்லாந்து (ஜூன் 5), பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற்று சூப்பர் 8க்கு முன்னேறும் பட்சத்தில் நியூசிலாந்து (ஜூன் 20), இலங்கை (ஜூன் 22), ஆஸ்திரேலியா (ஜூன் 24) ஆகிய அணிகளை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும்?

News May 29, 2024

8 விருதுகளை அள்ளிய “விக்ரம்” படம்

image

ஜப்பானில் வசிக்கும் தமிழர்கள் இணைந்து ஆண்டுதோறும் ‘ஒசாகா’ திரைப்பட விழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளனர். இதில் சிறந்த நடிகர் – கமல் (விக்ரம்), சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (சாணிக்காயிதம்), சிறந்த இயக்குநர் – மணிரத்னம் (PS-1) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் விக்ரம் படம் 8 விருதுகளையும், PS-1, 7 விருதுகளையும் வென்றுள்ளது.

News May 29, 2024

பிபவ் குமாருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

image

AAP மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த திங்கள் கிழமை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News May 29, 2024

வரலாற்றில் இன்று: மே 29

image

* ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்
* 1867 – ஆஸ்திரிய – ஹங்கேரியப் பேரரசு அமைக்கப்பட்டது.
*1869 – இங்கிலாந்தில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
* 1947 – இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
* 2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

News May 29, 2024

மழையால் போட்டி ரத்து

image

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கி., வெற்றிபெற்றது. நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை இரவு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் இங்கி., வெற்றிபெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும்.

News May 29, 2024

அதிக வருமானம் ஈட்டும் ஹெலிகாப்டர் நிறுவனங்கள்

image

மக்களவைத் தேர்தலை வைத்து ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அதிகமாக ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவதன் காரணமாக வாடகை 50% உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனங்கள் தற்போது வரை ₹350 – ₹400 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!