India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், 2007 முதல் நடைபெறுகிறது. இதில் 2007இல் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. 2009இல் பாகிஸ்தான், 2010இல் இங்கிலாந்து, 2012இல் வெஸ்ட் இண்டீஸ், 2014இல் இலங்கை, 2016இல் வெஸ்ட் இண்டீஸ், 2021இல் ஆஸ்திரேலியா, 2022இல் இங்கிலாந்து அணிகள் கோப்பை வென்றுள்ளன. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியை உலக நாயகன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் புகழ்ந்துள்ளார். சமூகவலைதளங்களால் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம் குறித்து பேட்டியளித்த டெய்லர், இன்ஸ்டா மற்றும் சமூகவலைதளம் மூலம் விளையாட்டு உலகில் கோலி உலக நாயகனாக திகழ்வதாகவும், பிரபல கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சிக்கு இணையானவர் கோலி என்றும் தெரிவித்தார்.
சென்னையில் காதல் குறித்த இளம்பெண்ணின் கருத்துக்களை அவரது அனுமதியின்றி ஒளிபரப்பியதன் காரணமாக யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Veera Talks Double X சேனலில் இளம்பெண்ணின் பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பியதால் அப்பெண் தற்கொலை முயற்சி செய்தார். இதனையடுத்து, பேட்டியெடுத்த ஸ்வேதா, ஒளிப்பதிவாளர் யோகராஜ், சேனல் உரிமையாளர் ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் ஹெர்பர்ட்டை வீழ்த்தினார். 2வது சுற்றில், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸை அவர் எதிர்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
SBI வங்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அவர்களின் ஸ்டாக் மார்கெட் நடவடிக்கைகளை கண்காணிக்க இருப்பதாகவும், ஆதலால், மேலதிகாரி அனுமதியின்றி, எஸ்பிஐ குழுமம் அல்லாத வேறு எந்த நிறுவனத்திலும் Demat கணக்கு அல்லது டிரெடிங் கணக்கு தொடங்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. முன் அனுமதியின்றி கணக்கு வைத்திருக்கும்பட்சத்தில், அதை 6 மாதத்திற்குள் மூடிவிடும்படியும் SBI உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரகால பயணமாக இமயமலைக்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஓய்வுக்காக அபுதாபி சென்ற அவர் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தவறாமல் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்ட அவர், இந்த ஆண்டும் தனது நண்பருடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹54,200க்கு விற்பனை ஆகிறது. நேற்று ₹6,740ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹35 அதிகரித்து ₹6775ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்றும் கிராமுக்கு ₹1.20 உயர்ந்து ₹102.20ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் தங்கம், வெள்ளி விலையினால் நுகர்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
காரைக்காலில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ் (13) என்ற மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தோஷின் உடலில் 17 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தேசத்துக்கான பணியில் இணைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு மாதங்களாக அணியணியாக பிரிந்து ஐபிஎல் விளையாடிய வீரர்கள், தற்போது ஒன்றிணைந்து உலகக் கோப்பை தொடரில் விளையாடச் சென்றிருக்கின்றனர். அதேநேரம், மனைவியின் பிரிவு தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஹர்திக், உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.