News April 30, 2024

நாளை ராமர் கோயில் செல்கிறார் திரவுபதி முர்மு

image

உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை செல்கிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியே அக்கோயிலை திறந்து வைத்தார். இதை வைத்து, பழங்குடியினர் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில் அயோத்திக்கு நாளை செல்லும் முர்மு, ஸ்ரீராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடத்தவுள்ளார்.

News April 30, 2024

ஐபிஎல் : தடுமாறும் மும்பை அணி

image

லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. லக்னோவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு, ரோகித் சர்மா(4), சூர்யகுமார் யாதவ்(10), திலக் வர்மா(7), பாண்டியா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 7 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

News April 30, 2024

எண்ணெய் நீராடுவோர் கவனத்துக்கு

image

உடல்சூட்டைத் தணிக்க எண்ணெய் நீராடுவது பொதுவான வழக்கம். இப்படி எண்ணெய் நீராடல் மேற்கொள்வதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. உடல்வெப்பத்தை தணிக்க நாள்தோறும் எண்ணெய் நீராடக்கூடாது, அப்படி நீராடினால் குளிர் காய்ச்சல் போன்ற பின்விளைவு ஏற்படும். தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து நீராடக் கூடாது. அப்படி நீராடினால், காதுவலி, முகவீக்கம், சைனஸ் போன்றவை ஏற்படக்கூடும்.

News April 30, 2024

தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?

image

மக்களவைத் தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தாஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத் தேர்தலின்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்று வெள்ளியன்று நடைபெறும் அடுத்த விசாரணையில் ED பதிலளிக்க உத்தரவிட்டனர்.

News April 30, 2024

ஊட்டி, கொடைக்கானல் வணிகர்கள் கோரிக்கை

image

மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற ஊட்டி, கொடைக்கானல் பகுதி வணிகர்கள் வலியுறுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மே 7 – ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசுக்கு, ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறியுள்ள வணிகர்கள், அந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியுள்ளனர்.

News April 30, 2024

உலகைக் கலக்கிய டாப் 15 திரில்லர் படங்கள்

image

உலக அளவில் வெளியான சிறந்த 15 திரில்லர் படங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம். அவை என்னென்ன? * தி எக்சார்சிஸ்ட் * ஈவில் டெட் *சைக்கோ *டெக்சாஸ்: செயின் மசாக்கர் *தி சைலன்ஸ் ஆப் லேம்ப் * மெமன்டோ * ஷா *பிரைடே தி 13 * ஹாலோவீன் * வேகன்சி * எஸ்கேப் ரூம் * தெர்டின் கோஸ்ட் * நைட்மேர் ஆப் எல்ம் ஸ்ட்ரீட் * டோன்ட் ப்ரீத் * ஸ்க்ரீம் *

News April 30, 2024

இரவில் பைக் ஓட்டுவோர் கவனத்துக்கு

image

இரவில் பைக் ஓட்டுவோர் கண்ணைக் காக்கச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்படவும், பைக்கிலுள்ள லைட் வெளிச்சத்தைக் கண்டு வரும் பூச்சி கண்ணில் மோதி விழித்திரை காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பூச்சி வேகமாக மோதினால் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கண்ணைக் காக்கக் கண்ணாடி அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்.

News April 30, 2024

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

image

தென்மாவட்டங்களில் இரவு 10 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

நாளை புஷ்பா-2 படத்தின் முதல் பாடல் வெளியீடு

image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா-2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. 2021இல் வெளியான புஷ்பா வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஆகஸ்டு 15 அன்று படம் திரைக்கு வரவுள்ளது.

News April 30, 2024

டைட்டானிக்: தங்கக் கைக் கடிகாரம் ₹12 கோடிக்கு ஏலம்

image

1912இல் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணித்து உயிரிழந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட 15 காரட் தங்கக் கைக் கடிகாரம் ₹12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஜான் ஜேக்கப் ஆஸ்டர், மனைவியுடன் ஹனிமூன் சென்றுவிட்டு டைட்டானிக்கில் திரும்பியபோது கப்பல் விபத்துக்குள்ளானது. உயிரிழந்த அவர் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிகாரத்தை, ஜெர்மனியைச் சேர்ந்த மேரன் கிரென் ஏலத்தில் எடுத்துள்ளார்.

error: Content is protected !!