India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி
▶போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி: மல்லிகார்ஜுன கார்கே
▶பாலியல் விவகாரத்தில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
▶தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
▶100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
▶டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது
தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையத்தின் செயல்கள்
உருவாக்குகிறது என்று சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 10 நாள்கள் கடந்து விட்டதாகக் கூறிய அவர், இருப்பினும் இறுதி நிலவர வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உடல் வெப்பம் அதிகமாகும் போது வெளியேறும் வியர்வை, வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக் கொள்வதால் வியர்க்குரு ஏற்படுகிறது. இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு வியர்க்குரு ஏற்பட வாய்ப்பு அதிகம். வியர்க்குருவால் அவதிப்படுவோர் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், 12 புள்ளிகளுடன் 3ஆவது முன்னேறியது லக்னோ அணி.
1917 புரட்சி மூலம் ரஷ்யாவில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. பிறகு ரஷ்யா தலைமையில் உருவான சோவியத் யூனியன் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை பரப்பப்பட்டு, புதிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசு மலர்ந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு, ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும், சீனா, வடகொரியா, கியூபா, வியட்நாம், வெனிசுலா, லாவோசில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பேற்பது? என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மவுலானா பசுலுர் ரகுமான் வினவியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகக் கனவு காண்கிறது. ஆனால் நாம் நாடு திவாலாவதைத் தவிர்க்க நிதியுதவி கேட்டு வருகிறோம்’ எனச் சோகத்துடன் பேசியுள்ளார்.
ஜோதிட பஞ்சாங்கத்தின்படி நாளை குரு பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு குபேர ராஜயோகம் காத்திருக்கிறது. குறிப்பாக, மேஷ ராசியினருக்கு வீடு, வாகனம், வேலை என செல்வம் வந்து சேரும். கடக ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த கண்டங்கள் விலகி ஓடும். சிம்ம ராசியினர் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்க உள்ளனர். கன்னி ராசியினருக்கு நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பொங்கும்.
கடலுக்கு அடியில் செல்லும் கேபிள் சேதமடைந்ததால், பாகிஸ்தானில் இணைய தள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்-பாகிஸ்தான்-ஐரோப்பாவை இணைக்கும் கேபிள், கடலுக்கு அடியில் செல்கிறது. இந்த கேபிள், 5 இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் இணைய தள சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி முடிந்து, இணைய தள சேவை மீண்டும் இயல்புக்கு வர ஒரு மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை வலுப்படுத்த பாடுபட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். முத்தலாக்குக்குத் தடை விதித்தோம். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தோம். ராமர் கோயிலைக் கட்டினோம். ஆனால் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறி வருகிறதென விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும். இதேபோல, கோவை, நாமக்கல் உள்பட 10 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட வெயில் சற்று அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.