News May 29, 2024

லைக்குகளை குவிக்கும் விக்கி – நயன் ஜோடி

image

தமிழ் திரைத்துறையின் பிரபல ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் விடுமுறைக்காக ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருவரும் பல்வேறு போஸ்களில் புகைப்படம் எடுத்த நிலையில், அவற்றை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. ரசிகர்கள் பலரும் Cute Couple என கமெண்ட் செய்து வருகின்றனர்.

News May 29, 2024

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா?

image

ஒரு காலத்தில் வயதானவர்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், தற்போது இளைஞர்களையும் தூக்கமின்மை பிரச்னை பாதித்துள்ளது. உயிரியல் கடிகாரத்தை சரி செய்தாலே தூக்கமின்மை பிரச்னையில் இருந்து விடுபடலாம் எனக் கூறும் மருத்துவர்கள், தூக்க சுழற்சியை நம்மால் முறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கின்றனர். இரவில் டீ, காபி குடிப்பதையும், பகலில் தூங்குவதையும் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News May 29, 2024

மோடியின் கடவுள் அவதார பேச்சை RSS ஏற்குமா?

image

பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய நாட்டு மக்கள் மோடியை கடவுளாக ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், மோடி வேறு ஒரு உலகத்தில் இருப்பதை போல் பேசி வருவதாக விமர்சித்தார். ராமரையும், கிருஷ்ணரையும் வணங்கும் மக்கள் மோடியை எப்படி கடவுளாக ஏற்க முடியும்? என்றார். மோடி பேட்டி ஒன்றில் தன்னை கடவுளின் அவதாரம் என கூறியிருந்தார்.

News May 29, 2024

ருத்ரா – 2 ஏவுகணை சோதனை வெற்றி

image

இந்தியாவின் ‘ருத்ரா – 2’ ஏவுகணை ஒடிஷாவின் Su-30 MK-I கடற்கரை தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. காலை 11.30 மணியளவில் இந்த சோதனை நடைபெற்றதாக அறிவித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, சோதனை நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்ததாக அறிவித்துள்ளது. ருத்ரா – 2 என்பது அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும்.

News May 29, 2024

ஜூன் மாதம் 8 நாள்கள் வங்கிகள் இயங்காது

image

ரிசர்வ் வங்கியின் வங்கிகளுக்கான விடுமுறை நாள் குறித்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஜூன் மாதம் 8 நாள்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் (பொதுவிடுமுறை) என 8 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்கள் வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

பிரஜ்வால் முன்ஜாமின் மனு நிராகரிப்பு

image

பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக எம்.பி பிரஜ்வால் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவர், நாளை பெங்களூரு வரவுள்ள நிலையில், அவரை விமான நிலையத்தில் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, பிரஜ்வால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

வாக்கு அரசியல் செய்யவே தியானம்: கே.பாலகிருஷ்ணன்

image

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தியான நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்ற அவர், வாக்கு அரசியல் செய்வதற்காகவே பிரமதர் மோடி குமரியில் தியானம் செய்ய இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் மோடி, மே31 முதல் 2 நாள்களுக்கு இரவும் பகலாக தியானம் மேற்கொள்ள உள்ளார்.

News May 29, 2024

தென் கொரியாவை வம்புக்கு இழுக்கும் வட கொரியா

image

தென் கொரியா எல்லைக்குள் வட கொரியா 260க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பைகள், கழிவுகள் உள்ளிட்ட சில பொருட்களை போடுவதற்காக அந்த ராட்சத பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் இருந்த பொருட்களை ராணுவ வெடிமருந்து பிரிவினர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு தென் கொரியா அறிவுறுத்தியுள்ளது.

News May 29, 2024

திமுகவின் தில்லுமுல்லுகளை தடுக்க வேண்டும்: இபிஎஸ்

image

வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் தில்லுமுல்லு நடத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என கட்சி முகவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். வாக்குகளை களவாடி புறவாசல் வழியாகவே திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளதாக விமர்சித்த அவர், வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் மடை மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றார். அதிமுகவுக்கு மக்கள் வெற்றியை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News May 29, 2024

7 ஆண்டுகளில் வெப்ப அலையால் 3,812 பேர் மரணம்

image

பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் வெயில் அதிகரிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் இன்று வரலாறு காணாத வகையில், 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. வெயில் காலங்களில் நாட்டில் மின் தேவை அதிகரிப்பதோடு, குடிநீர் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கிறது. 2015 – 2022 காலக்கட்டத்தில் 3,812 பேர் வெப்ப அலையால் உயிரிழந்திருப்பதாக கூறும் உலக சுகாதார அமைப்பு, இது கவனிக்கத்தக்க பிரச்னையாக கருதுகிறது.

error: Content is protected !!