News May 30, 2024

சென்னையில் துணை நடிகை பலாத்காரம்

image

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News May 30, 2024

மோடி எதை செய்தாலும் குற்றமா?: நிர்மலா சீதாராமன்

image

பிரதமர் எதை செய்தாலும் எதிர்க்கட்சிகள் குற்றம் காண்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், இந்தியாவின் கலாச்சாரத்தை காங்., தலைவர்கள் விரும்பவில்லை எனவும், அவர்கள் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு செல்லவே விரும்புவதாகவும் சாடினார். மோடி பேசினால் குற்றம் கண்டுபிடிக்கும் எதிர்க்கட்சிகள், பேசாமல் தியானம் செய்தாலும் குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.

News May 30, 2024

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின்

image

செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் மீது கவனக்குறைவாக கார் ஓட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து, ஜூன் 4ஆம் தேதி புதிய படத்தில் நடிக்கவுள்ளதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவர் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் சுப்புலட்சுமி ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார் .

News May 30, 2024

முகேஷ் அம்பானி மகனுக்கு ஜுலை 12இல் திருமணம்

image

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்துக்கும், குஜராத் தொழிலதிபர் வீரேன் மெர்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 பேருக்கும் சுபமுகூர்த்த தினமான வருகிற ஜுலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக கருத்தரங்கு மைய கட்டிடத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

News May 30, 2024

கோலி உடனான உறவு குறித்து பேசிய கம்பீர்

image

விராட் கோலி உடனான தனது உறவு குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கோலி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் வித்தியாசம் உள்ளது. அணியின் வெற்றிக்காக கருத்துத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது மக்களுக்கு பொழுதுபோக்கு அளிப்பதற்கானது அல்ல” எனக் கூறினார்.

News May 30, 2024

குமரிக்கு படப்பிடிப்புக்காக செல்லும் மோடி : தேஜஸ்வி

image

பிரதமர் மோடி குமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு தியானம் செய்ய செல்லவில்லை, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காகவே செல்கிறார் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் பாறையில், கேமரா இன்றி மோடி தியானம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்த உடன், மோடி தியானம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

News May 30, 2024

வாழைத்தார் விலை 2 மடங்கு உயர்வு

image

வரத்து குறைவால் வாழைத்தார் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹500க்கு விற்பனையான செவ்வாழைத்தார் தற்போது ₹1,500க்கும், ₹300க்கு விற்பனையான கற்பூரவள்ளி வாழைத்தார் தற்போது ₹700க்கும், ₹200க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் ₹600க்கும், பூவம் பழத்தார் ₹400 – ₹450க்கும் விற்பனையாகிறது. அதேபோல், தக்காளி, முட்டைகோஸ், பீட்ரூட், மிளகாய். உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளன.

News May 30, 2024

‘மூக்குத்தி அம்மன்’ 2ஆம் பாகம் உருவாகிறது?

image

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த 2020இல் வெளியான இப்படம், மிகப்பெரிய வசூலைக் குவித்தது. இந்நிலையில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை கொண்டு 2ஆம் பாகம் உருவாக உள்ளதால், படத்திற்கு ‘மூக்குத்தி அம்மன் 2’ எனப் பெயரிட போவதில்லை என்றும், அதேபோல், இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News May 30, 2024

குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றமா?

image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமுதாயத்தில் சீர்கேட்டை விளைவிக்கும் இவ்வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ முதன்மை நீதிமன்றம் பரிந்துரைத்தது.

News May 30, 2024

2ஆவது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

image

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடி 21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். 2, 3ஆவது செட்டில் தடுமாறிய சிந்து, 11-21, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். இது கரோலினாவுக்கு எதிரான 6ஆவது தொடர் தோல்வி ஆகும்.

error: Content is protected !!