India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். 3 நாள்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ள அவர், தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற அவர், இரவு 7 முதல் 7.30 வரை தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அறைக்கு திரும்பிய அவர், இன்று காலை முதல் மீண்டும் தியானத்தைத் தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பாஜக சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தப் போவதை உறுதிசெய்யும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நமபிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீது தமிழர்கள் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் எனக் கூறிய அவர், ஜூன் 4இல் வெளியாகும் முடிவுகள் அதனை வெளிப்படுத்தும் என்றார். அத்துடன், ராகுல் அரசியலில் இருந்தே காணாமல் போகிற நாளாக அது இருக்கும் எனத் தெரிவித்தார்.
வட மாநிலங்களில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராடி வருகின்றனர். அங்கு, லாரி ஒன்றில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைப்புகள் மூலம், நீண்ட வரிசையில் நின்று மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தண்ணீரை சிக்கனமாக சேமிக்காவிட்டால் நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த யாஸ்மிகாவை நாய்கள் கடித்ததில் அவரது கன்னம் கிழிந்து தொங்கியது. இதனால், குழந்தைக்கு உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருகிறது. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, மேற்கு திசை நோக்கி காற்று வலுவாக இருக்கும். இதனால் ஈரப்பதம் கடலை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில் கடலோரப் பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும். அதே போல, மேற்கில் இருந்து வரும் காற்று வலுவாக இருப்பதால், கடல் காற்று நிலப் பகுதிகளுக்குள் வருவது கிடையாது. இதன் காரணமாகவே கடலோர மாவட்டமான சென்னையில் அனல் வீசுகிறது.
நாடு முழுவதும் இரண்டரை மாதங்களாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை இறுதிக்கட்ட (7ஆவது) வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தீராத கடன் பிரச்னையில் சிக்கி அல்லல்படுவோர் செந்நெறியப்பரை வழிப்பட்டால் நிம்மதியை அடையலாம் என்று தேவாரப்பாடல் கூறுகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயிலுக்கு திங்கட்கிழமை விரதமிருந்து சென்று, பிந்துசுதா தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, “செந்நெறி யான்கழல்” பதிகம் பாடி வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.
* சராசரி வாழ்நாள்: 70 ஆண்டுகள்
* நாளொன்றுக்கு 16 மணி நேரம் உணவு சேகரிக்கின்றது
* ஒவ்வொரு நாளும் 140 முதல் 270 கிலோ உணவை உட்கொள்கிறது
* இவை சராசரியாக 3 மீட்டர் உயரமும், 6000 கிலோ எடையும் கொண்டவை
* யானையின் தோல் மட்டும் 3 செ.மீ. தடிமனானது
* யானையின் துதிக்கை 4000 தசைகளால் ஆனது.
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் அயர்லாந்து – இலங்கை, ஸ்காட்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை அதிகாலை 4:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்தியா- வங்க தேசம் அணிகள் மோதுகின்றன.
தென் தமிழகத்தின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஜூன் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.