India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு நீதிமன்றம் விரைவில் தண்டனை அறிவிக்கவுள்ளது. 235 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாற்றில், முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒரு லட்சம் கிலோவுக்கும் (100 டன்) மேலான சொக்கத் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது RBI. அதன் கையிருப்பில் சுமார் 822 டன் தங்கம் உள்ளது. ஆனால், அவற்றை வெளிநாடுகளில் சேமித்து வைக்கும் வழக்கம் சுதந்திரம் பெற்றது முதலே இருந்து வருகிறது. அந்நிலையை மாற்றும் விதமாக, அதற்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நமக்கு சொந்தமான தங்கம், உள் நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டை காட்டி, பேருந்துகளில் அவர்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணிக்க முடியும் எனத் தெரிகிறது. அண்மையில் காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்கள் வாயிலாக காவலர்களுக்கு ஜூலைக்குள் ஸ்மார்ட்கார்டு விநியோகிக்கப்பட உள்ளது.
PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும். வரி செலுத்துவோர் அனைவரும் மே 31ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், அதிக டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் PAN எண் செயல்படாததாகக் கருதப்படும்.
பல தடைகளையும் மீறி தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீன மடாதிபதியான குருஞான சம்மந்த சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருளி பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். 70க்கும் அதிகமான பக்தர்கள் அவரை சுமந்து வலம் வந்தனர். மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டு முதல் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்திருக்கிறார் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கர். ஒருமுறை அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது நடுத்தர வயதுடைய ஒருவர் உரசியதாகவும், அவரது வயிற்றில் ஓங்கி குத்து விட்டவுடன் அவர் இறங்கி சென்றுவிட்டதாகவும் அப்போது பேருந்தில் இருந்த யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அஞ்சலி பாஸ்கர் ஆதங்கம் தெரிவித்தார்.
அண்மையில், சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்றார். அதில் வடிவேலு கண்கலங்கி பகிர்ந்த விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு வாழ்க்கையில் சோறு போட்ட தெய்வம் என்றால், அது ராஜ்கிரண் தான் என்று நினைவுகூர்ந்தார். சினிமாவிற்குள் தான் வருவதற்கு அவர் தான் காரணம் என்று கண்ணீர் மல்க பேசினார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 11ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 19ல் நிறைவடைய உள்ளது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பிறகு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த ஆலோசனை நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா ஆதிக்கம் செலுத்துவார் என்று கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் பும்ரா பேட்ஸ்மேன்களை திணறடித்து, விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அத்துடன், ரன் எடுப்பதையும் குறைக்கிறார். அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்ய முடியும்” என்றார்.
நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே5ம் தேதி நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவர்களின் விடைத்தாள் நகல்கள், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகளுக்கான மதிப்பீட்டில் ஆட்சேபனை இருந்தால், நாளை இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.