India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
RR-க்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் SRH அணி வெற்றி பெற்றது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RR அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ஜெய்ஸ்வால் கூட்டணி, அணிக்கு நம்பிக்கையூட்டினர். ஆனால், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்துவீசி SRH அணியை வெற்றி பெறச் செய்தார்.
▶’அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் நாளை முதல் தொடங்குகிறது
▶காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பற்றி விவாதிக்க தயாரா?: கார்கே சவால்
▶மோடியின் பேச்சில் உண்மையும், யதார்த்த தன்மையும் இல்லை: சரத்பவார்
▶பிரஜ்வால் விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி
▶இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: தமிழக அரசு
▶IPL: ஹைதராபாத் அணி வெற்றி
வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது மகளிர் டி20 போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா-47, ஷஃபாலி-51, அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 3-0 என்ற கணக்கில், இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளா்களின் தனிப்பட்ட தரவுகளை, அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள், கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால், அதை உடனே நிறுத்திக்கொள்ளுமாறு தேசிய, மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை 4’, கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’, எம்.எஸ்.பாஸ்கரின் ‘அக்கரன்’, டான்ஸ் மாஸ்டர் தினேஷின் ‘நின்னு விளையாடு’, சாய் தன்ஷிகாவின் ‘தி ப்ரூஃப்’, ‘சபரி’ ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகின்றன. அதேபோல், ஜி.வி.பிரகாஷின் ‘டியர்’ மற்றும் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள ‘சைத்தான்’ (ஹிந்தி) ஆகிய திரைப்படங்கள் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகின்றன.
▶மே – 3, சித்திரை – 20 ▶கிழமை – வெள்ளி
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM
▶குளிகை நேரம்: 7:30 AM – 9:00 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: தசமி
▶நட்சத்திரம்: 12:06 AM வரை சதயம் பிறகு பூரட்டாதி
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைதான கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமார், கெஜ்ரிவாலை சிறையில் அமைத்ததற்கு டெல்லி மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், இதற்கு வாக்குகளால் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். CSK-PBKS இடையேயான IPL போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச்சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திருவல்லிக்கேணி பகுதியில் 13 பேரை கைது செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிா்வாகிகள் குழுவில், மகளிருக்கு 3இல் 1 பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிா்வாகிகள் குழுவில் 3 இடங்களும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் 1 இடமும் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். வரும் 2024-25 வழக்கறிஞர் சங்கத் தோ்தலில், பொருளாளா் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
Sorry, no posts matched your criteria.